பணம் சேர பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய பொருள்.

poojairoom
- Advertisement -

பணம் இல்லை என்ற சொல்லுக்கு உங்களுடைய வீட்டில் இடம் கொடுக்கக் கூடாது. அந்த அளவுக்கு வருமானத்தை பெருக்கிக் கொண்டே செல்ல வேண்டும். பணத்தை சேமித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டில் வறுமையும் தாங்காது. பணத்தை ஈர்ப்பதற்கு எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். இந்த ஒரு பொருளை மட்டும் பூஜை அறையில் வாங்கி வையுங்கள். உங்களுடைய வீட்டில் பணம் காசு நிச்சயம் நிரம்பி வழியும் அது என்ன பொருள்.

பணம் சேர பூஜை அறையில் வைக்க வேண்டிய பொருள்

ஒரு சின்னதாக பித்தளை தட்டு வாங்கிக்கோங்க. அதன் மேல் வைப்பதற்கு வெண்கல சொம்பு வாங்கிக் கொள்ளவும். மிக மிக சிறிய அளவில் இது பூஜை ஜாமான்கள் விற்கக் கூடிய கடைகளில் கிடைக்கும். போய் கேட்டால் அவர்கள் கொடுப்பார்கள். எவ்வளவோ செலவு செய்கின்றோம். இந்த பொருள் வாங்குவதற்கு கணக்கு பார்க்காதீங்க.

- Advertisement -

கூடவே வெள்ளி பொருட்கள் விற்கும் கடைக்கு போய் வெறும் 1 கிராமில், ஒரு பக்கம் லட்சுமி தாயார், மறுபக்கம் தாமரை போட்டது போல வெள்ளி காயின் விற்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். 100 ரூபாய் செலவு செய்தாலே இந்த வெள்ளி காயின் வாங்கிவிடலாம். இந்த பொருட்களை எல்லாம் ஒரு நல்ல நாளில் வாங்கி வீட்டிற்கு எடுத்து வரவும்.

ஒரு வெள்ளிக்கிழமை அல்லது வியாழக்கிழமை உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, பூக்களால் அலங்காரம் செய்து விட்டீர்கள். பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து, வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த சின்ன பித்தளை தட்டுக்கு மேலே வெங்கல சொம்பை வைத்து, அது நிரம்ப பச்சரிசியை போட்டு, அந்த பச்சரிசிக்கு மேலே இந்த நாணயத்தை வைத்து, மகாலட்சுமி தாயாரின் திருவுருவப்படத்திற்கு முன்பாக இதை வைத்து விட்டால், போதும். வீட்டில் பணம் காசு நிரம்பி வழியும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் குபேரர் பொம்மை இருக்கிறது. பூஜை அறையில் குபேரது சிலை இருக்கிறது எனும் பட்சத்தில் அந்த குபேரருக்கு பக்கத்திலும் இந்த கலசத்தை வைக்கலாம். மாதம் ஒருமுறை உள்ளே இருக்கும் பச்சரிசியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போட்டுக் கொள்ளலாம். தேவையென்றால் அதை எடுத்து நீங்கள் கழுவி சமைப்பதற்கும் பயன்படுத்தலாம் தவறு கிடையாது.

பூஜை அறையில் எப்போதும் வெண்கல பாத்திரத்தில் கொஞ்சம் பச்சரிசியும், அதன் மேல் வெள்ளி நாணயமும் இருப்பது வீட்டிற்கு அவ்வளவு சுபிட்சத்தை தரும். நீங்கள் வேண்டுமென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: சனி வக்ர பெயர்ச்சி பரிகாரங்கள்

உங்களுடைய வீட்டில் தற்போது இருக்கும் நிலைக்கும், இந்த பொருள் பூஜை அறைக்குள் வந்த பிறகு வரக்கூடிய மாற்றத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்திற்கு நல்லது சொன்னால் கட்டாயம் அதை கேட்டுக் கொள்ளணும், நல்லது நிச்சயம் நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -