இந்த 1 பொருள் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால் போதும். உங்கள் வீடுதான் தெய்வத்திற்கு ரொம்ப ரொம்பப் பிடித்தமான வீடாக இருக்கும்.

poojai-room
- Advertisement -

ஒரு வீடு தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாக இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கஷ்டங்கள் இருந்தாலும், துயரங்கள் இருந்தாலும், துன்பங்கள் இருந்தாலும், அதை கண்டு எப்போதுமே மனம் கலங்கி கொண்டே இருக்கக் கூடாது. அதற்காக கஷ்டங்களை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. கஷ்டங்கள் இருப்பினும் அதற்கான தீர்வைப் பெற நம்முடைய வேலைகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் மனக் குழப்பத்தோடு நிம்மதி இல்லாமல் மனதில் சலனத்தோடு சஞ்சலத்தோடு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. சந்தோஷம் இருக்காது. தெய்வமும் தங்காது.

ஆக, முதலில் வீட்டில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். வீட்டில் சிரிப்பு சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அந்த வீட்டில் இறைசக்தி குடியிருக்கும். இதுதான் முதல் விஷயம். இதுதவிர ஆன்மிக ரீதியாக நம் வீட்டில் இறை சக்தியை குடியேற்ற வேண்டுமென்றால் பூஜை அறையில் என்ன பொருளை வைப்பது.

- Advertisement -

நாம் எல்லோரும் அறிந்த நாம் எல்லோருக்கும் தெரிந்த வாசனை நிறைந்த ஒரு மூலிகைப் பொருள் தான் அது. வெட்டி வேர். அந்த காலத்தில் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்போது இந்த வெட்டி வேருக்கு முதலிடம் இருந்தது. வெட்டி வேர் இல்லாத பூஜை புனஸ்காரங்கள் இல்லை என்று கூட சொல்லலாம். அதாவது இன்றைய சூழ்நிலையில் பூஜை என்றால், வெற்றிலை பாக்கிற்க்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போல் முக்கியத்துவம், அந்த காலத்தில் இந்த வெட்டி வெறுக்கும் கொடுக்கப்பட்டு வந்தது.

காலப்போக்கில் நாம் வெட்டிவேரை மறந்து விட்டோம். வீட்டில் பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கோடு எப்போதுமே ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை வைத்து பூஜை செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். இப்படி செய்யும்போது, வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைவாக இருக்கும். இதுமட்டுமல்லாமல் வீட்டு வரவேற்பறையில் ஒரு டம்ளர் தண்ணீரில் வெட்டிவேரை போட்டு வைத்தோமே ஆனால், வீட்டில் கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் கெட்ட சக்தியின் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் வராது. இந்த நல்ல வாசம் நிரம்பி இருக்கும் இடத்தில் கெட்ட சக்தியால் காலடியை கூட எடுத்து வைக்க முடியாது. ஏனென்றால் இந்த வாசம் இருக்கக்கூடிய இடத்தில் தெய்வம் வந்து குடி கொண்டுவிடும்.

- Advertisement -

இனம்புரியாத மன கஷ்டத்தில் இருக்கும் போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனையை ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். கஷ்டத்தை எழுதிய வெள்ளை காகிதத்தின் நடுவே ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை வைத்து சுருட்டி முடிச்சுப் போட்டு அப்படியே உங்கள் பூஜையறையில் சுவாமி படத்திற்கு பின் பக்கம் வைத்து விடுங்கள். உங்கள் மனதில் இருந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ பிரச்சனை எல்லாம் சரியாகி விட்டது போல உங்களுடைய மனது லேசாகி விடும். பிரச்சினைக்கு தீர்வை பிறகு தேடிக் கொள்ளலாம். என்ன ஆகிவிட போகிறது. எந்த ஒரு தைரியம் உங்களுக்குள் வந்துவிடும்.

பிறகு பிரச்சனையை சுலபமாக நீங்களே தீர்த்து விடுவீர்கள். மனம் தெளிவாக இருந்தால் குழப்பத்திற்கு சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும். அந்தத் தெளிவை கொடுக்கக் கூடிய சக்தி இந்த வெட்டி வேருக்கு உண்டு. உங்களுக்கு மேல் சொன்ன குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -