உங்கள் வீட்டு தோட்டத்தில் இருக்கும் ரோஜா செடியில் பூக்கள் பூக்க வில்லையா? கவலை வேண்டாம். இந்த ஒரு கலவையை மட்டும் அதில் சேர்த்து பாருங்கள். அதன்பின் உங்கள் பூச்செடியில் பூக்கள் கொத்துக்கொத்தாக பூக்கும்

rose
- Advertisement -

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் பலவிதமான செடிகளை வாங்கி வைத்து வளர்த்து வருகிறார்கள். அதிலும் மிகவும் ஆசை ஆசையாக அழகான வண்ணங்களில் இருக்கும் பூச்செடிகளை தான் அதிகமாக வளர்ப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ஆசை மட்டும் இருக்குமே தவிர அவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதே தெரியாது. செடிகளை வளர்ப்பதற்கு என்று பல பக்குவமான முறைகள் இருக்கின்றன. அவற்றிற்கு போதுமான ஊட்டச்சத்துகளை தகுந்த நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக அவைகள் தொடர்ந்து பூக்கள் கொடுக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறான பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gardening3

நர்சரிகளில் இருந்து வாங்கி வரும் பூச்செடிகளில் ஆரம்பத்தில் நிறைய மொட்டுக்கள் இருக்கும். ஆனால் அவற்றை வீட்டில் வைத்து வளர்க்கும் பொழுது அது அவ்வளவாக பூக்கள் கொடுப்பதில்லை. அல்லது சில செடிகள் மிகவும் காய்ந்தும் வேரோடு அழுகியும் விடுகின்றது. இது மட்டுமல்லாமல் ஒரு சில செடிகளில் ஏழு இலைகள் மட்டுமே தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். அதில் ஒரு பூ கூட வராமல் இருக்கும். இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே நாம் ஒரு கலவையை தயார் செய்து பயன்படுத்த முடியும். இந்த ஒரு கலவை உங்கள் செடியில் எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்த்து விடும்.

- Advertisement -

அதற்காக முதலில் மூன்று நாட்டு தக்காளியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நான்கு துண்டுகளாக அரிந்து மிக்ஸியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் கருப்பட்டி வெல்லத்தை எடுத்து தூள் தூளாக உடைத்துக்கொண்டு அதனையும் மிக்ஸியில் சேர்த்து இரண்டையும் ஒன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

தக்காளி

பின்னர் இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு எப்போது தேவையோ அப்பொழுது இதிலிருந்து 150ml எடுத்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை பூக்கள் பூக்காத செடிகளுக்கு ஊற்றி வரவேண்டும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வரவேண்டும்.

- Advertisement -

இந்த செடிகளில் கால்சியம் பொட்டாசியம் அல்லது அயன் இவற்றில் ஏதாவது ஒன்றின் குறைபாடு தான் இருக்கும். இவ்வாறான அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு கலவையே தீர்வாக இருக்கும். நீங்கள் பொட்டாசியம் உரம் கொடுத்திருந்தாலும் இந்த கலவையையும் சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம். வெறும் பூ செடிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து விதமான காய்கறி செடிகளிலும் கூட இந்த கலவையை பயன்படுத்தி வரலாம்.

karupatti

இவ்வாறு வாரம் ஒருமுறை இந்த கலவையை பயன்படுத்தி வந்தால் பூக்கள் பூக்காத செடிகளிலும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும். காய்கறி செடிகளிலும் மகசூல் நன்றாக இருக்கும். ஒரு சில செடிகளில் பூக்கள் வரும் ஆனால் அவை காய்கள் வருவதற்கு முன்னரே உதிர்ந்துவிடும். இவ்வாறான பிரச்சினைக்கும் இந்த கலவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -