நீங்க நல்லாவே இருக்க கூடாதுன்னு நினைக்கிற அந்த 4 பேர் வீட்டுக்குள் வந்தாலே குடும்பத்தில் குழப்பமா? வரவேற்பறையில் இந்தப் பொருளை மட்டும் இப்படி வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

kandhrishti
- Advertisement -

வாழ்க்கையில் ஒரு படி ஏறினால் இரண்டு படி சறுக்குகிறதா?உங்களை சுற்றி இருக்கும் அந்த நாலுபேர், நீங்கள் எப்படா வாழ்க்கையில் தோற்றுப் போய் அதலபாதாளத்தில் விழ போகிறீர்கள் என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்களா? இந்த நிலைமை உங்களுக்கு ஏற்பட்டால் நிச்சயம் நீங்கள் வெற்றியின் அருகில் இருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். வாழ்க்கையில் ஜெயிக்க போகிறீர்கள் என்று தான் அர்த்தம். உங்களை கைநீட்டி குறை சொல்லும் அந்த நாலு பேரை கண்டு என்றைக்குமே நீங்கள் கவலைப்படாதீர்கள்.

நாம் நன்றாக வாழ்கின்றோம், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டு இருக்கின்றோம் என்றாலும் நம்மைப் பார்த்து வயிற்றெரிச்சல் பட பொறாமைப்பட நம்மை சுற்றி எப்போதும் அந்த நாலு பேர் இருப்பார்கள். வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலையால் ஏதோ ஒரு எதிர்பாராத பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம் என்றாலும், அதைப் பற்றிப் புறம் பேசி நம்மை வார்த்தையால் குத்தி குத்தி மனதை ரணமாக்கவும் அந்த நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள்.

- Advertisement -

இப்படிப்பட்ட அந்த நாலு பேரை நீங்கள் தள்ளி வைத்து விடுங்கள். அவர்களைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவுக்காரர்கள் ஆக இருந்தாலும் சரி, உங்களுக்கு நல்லது செய்யக்கூடிய, எப்போதும் பாசிட்டிவாக பேசக்கூடிய ஒரு நாலு பேரை, அருகில் வைத்துக் கொள்வது நல்லது. இந்தப் புத்தாண்டில் இருந்து, நாம் நன்றாக இருக்க கூடாது என்று நினைக்கக்கூடிய அந்த நாலு பேரிடம் இருந்து ஒதுங்கி இருப்போம்.

என்னதான் செய்வது? நாம் ஒதுங்கி ஒதுங்கி சென்றாலும், நமக்கு பிரச்சனை கொடுக்க அந்த நாலுபேர் மீண்டும் மீண்டும் வரத்தான் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றால், வீட்டில் சண்டை சச்சரவு எதிர்பாராத பிரச்சனைகள், குழப்பங்கள், வந்து விடுகின்றது. வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. என்னதான் செய்வது.

- Advertisement -

ஒரு சிறிய டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயத்தை காம்பு பகுதியை மட்டும் நீக்கி கொள்ள வேண்டும். உள்ளே இருக்கும் வெங்காயம், காம்பு பகுதியை நீக்கி உடன் தெரியவேண்டும். அந்த அளவிற்கு காம்பு பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, இந்த வெங்காயத்தை டம்ளருக்குள் வைத்து விடுங்கள். டம்ளருக்குள் வெங்காயத்தை வைக்கும்போது நறுக்கிய பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.

வெங்காயத்தின் காம்பு நீக்கப்பட்ட அந்த இடத்தில் கொஞ்சமாக அதாவது ஒரு டேபிள்ஸ்பூன் அளவு கல்லுப்பு வைத்து விடுங்கள். இந்த டம்ளரை அப்படியே வரவேற்பறையில் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்துவிட வேண்டும். (வெங்காயம் டம்ளருக்குள் செட்டாவது போல் சரியான அளவில் வெங்காயத்தையும் டம்ளரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வெங்காயத்தின் மேலே கல்லுப்பு அப்படியே நிற்கும். வெங்காயம் சாயாயாமலிருக்கும்.

வாரம் ஒரு முறை பழைய வெங்காயம் கல்லுப்பை தூக்கிப் போட்டுவிட்டு, மீண்டும் புதியதாக வைக்க மறக்காதீர்கள். இப்படி செய்தால் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் அவர்களுடைய கெட்ட எண்ணத்தை இந்த வெங்காயமும் கல்லுப்பு உள்வாங்கிக்கொள்ளும். உங்களுக்கு பெரிய கெடுதல் வராமல் தடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -