அரசாங்க வேலை, பதவி உயர்வு பெற, நினைத்த காரியத்தில் வெற்றியடைய இவை அனைத்தும் நடைபெற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்

job
- Advertisement -

காலம் காலமாக வேண்டுதல் செய்வது என்பது நமது முன்னோர்களின் வழக்கத்தில் இருந்து இன்று வரை நாம் பின்பற்றிவரும் ஒரு விஷயமாகும். அவ்வாறு நம் மனதில் தோன்றும் ஒரு சில செயல்களுக்கு கடவுளிடம் நான் நினைக்கும் இந்த காரியம் நிறைவேறியதென்றால் உங்களுக்கு இந்தப் பரிகாரத்தை தவறாமல் செய்கிறேன் என்று வேண்டிக் கொள்வோம். அவ்வாறு பல கோடி மக்கள் செய்கின்ற ஒரு பரிகாரம் தான் கோவிலில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்து பூஜை செய்வது. இந்த பொங்கல் பச்சரிசி மற்றும் வெல்லம் அல்லது பச்சை அரிசி மற்றும் பால் சேர்த்து பொங்கல் வைப்பது. ஆனால் ஒரு விசேஷ உணவுப் பொருளான இந்த குறிப்பிட்ட அரிசியை பயன்படுத்தி பொங்கல் வைத்து பூஜை செய்யும் பொழுது நம் வேண்டுதல் நிறைவேறி நம் மனதில் நினைக்கும் காரியம் வெற்றி அடைகிறது. வாருங்கள் அது என்ன பொருள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

kuladheivam

முந்தைய மன்னர்கள் காலத்தில் எல்லாம் அரச குலத்தில் இருப்பவர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே பலவித பாகுபாடுகள் இருந்ததன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை வாழ்க்கை முறையிலும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.

- Advertisement -

இவ்வாறு மன்னர்கள் மிகவும் விலை உயர்ந்த உணவுகளையும் சுவையான உணவுகளையும் உண்பார்கள். அதில் கருப்பு கவுனி அரிசி என்பது மருத்துவ ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பல அற்புத சக்திகளை தன்னுள் அடக்கி வைத்துள்ள ஒரு உணவுப் பொருளாகும்.எனவேதான் இந்த அரிசிக்கு மன்னர் அரிசி என்ற சிறப்பு பெயரும் இருக்கிறது.

king

இந்த அரிசியை மன்னர்கள் தவிர மற்ற பொதுமக்கள் உண்ணக்கூடாது என்பது சட்டமாக இருந்தது. போருக்கு செல்லும் முன்னரும், தனது பதவியை தக்க வைப்பதற்காகவும் இந்த கருப்பு கவுனி அரிசியயை பயன்படுத்தி பொங்கலிட்டு கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். அவ்வாறு நினைக்கும் காரியத்தை வெற்றி அடைய செய்யும் அற்புத சக்தி இந்த கவுனி அரிசி இருக்கிறது.

- Advertisement -

எனவே பதவி உயர்வு, அரசாங்க வேலை, அரசியலில் ஆளுமை இடத்தை பிடிப்பது அல்லது நாம் இருக்கும் எந்த இடத்திலும் நமது கை ஓங்கி இருப்பது என செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் வெற்றி அடைவதற்காக இவை அனைத்திற்கும் பரிகாரமாக, கருப்பு கவுனி அரிசியை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து, அதன் பின்னர் கோவிலுக்கு எடுத்துச் சென்று, வெல்லம் சேர்த்து பொங்கலிட்டு, இறைவனுக்கு படைத்து, பூஜை செய்யவேண்டும்.

pongal

மனதிற்குள் நாம் நினைத்திருக்கும் வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நமக்கு வேண்டிய விஷயம் நடப்பதற்கு முன்னரும் பின்னரும் இருமுறை கருப்பு கவுனி அரிசியில் பொங்கலிட்டு பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு பொங்கலிட்டு வேண்டுதல் வைத்துக் கொண்டோம் என்றால் நம் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த வேண்டுதலை உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு எதற்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -