கால் விரலை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிவது எப்படி தெரியுமா?

astrology
- Advertisement -

ஜோதிடம் மூலம் எப்படி ஒருவரின் குணாதிசயங்களை அறிய முடியுமோ அதே போல ஒருவரின் உடல் அமைப்பை வைத்தும் அவரின் குணத்தை அறிய முடியும். அந்த வகையில் கால்களில் உள்ள விரைகளை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறிவது எப்படி என பார்ப்போம் வாருங்கள்.

leg

பெருவிரல் :

- Advertisement -

ஒரு நபருக்கு மற்ற விரல்களை காட்டிலும் பெருவிரல் பெரியதாக இருந்தால் அவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் தன் புத்திசாலித்தனத்தின் மூலம் எளிதில் சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்களின் படைப்பு திறனும் சற்று அதிகமாகவே இருக்கும்.

மற்ற விரல்களை காட்டிலும் பெருவிரல் சிறியதாக இருக்குமாயின் அந்த நபர் பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யும் திறன் கொண்டவராக இருப்பார்.

- Advertisement -

leg

இரண்டாம் விரல் :

காலில் உள்ள இரண்டாவது விரல் பெரியதாக இருப்பவர்கள் நல்ல தலைவராக இருப்பார்கள். அவர்களுக்கு பேச்சாற்றல் சற்று அதிகமாக இருக்கும். நல்ல முடிவுகளை எடுக்கும் திறன் உண்டு.

- Advertisement -

காலில் உள்ள இரண்டாவது விரல் சிறியதாக இருப்பவர்கள் எந்த வேலையையும் சுமையாக நினைப்பவர்கள். ஆனால் இவர்கள் சோம்பேறிகள் கிடையாது. வேலையை சுமையாக நினைத்தாலும் அதை கட்சிதமாக முடிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள்.

leg

மூன்றாம் விரல் :

மற்ற விரல்களை காட்டிலும் மூன்றாவது விரல் ஒருவருக்கு பெரியதாக இருக்குமாயின் அவர்கள் செய்யும் வேலையில் எப்போதும் ஒரு தனித்துவம் இருக்கும். அதோடு வேளைகளில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

மற்ற விரல்களை காட்டிலும் மூன்றாவது விரல் சிறியதாக இருக்குமாயின் அவர்கள் வாழ்க்கையை எப்போதும் ஆனதமாக வாழவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

leg

நான்காவது விரல் :

மற்ற விரல்களை காட்டிலும் நான்காவது விரல் பெரியதாக இருக்குமாயின் அவர்கள் தன் குடும்ப முன்னேற்றத்திற்காக எப்போதும் உழைப்பவர்களாக இருப்பார்கள். தன் குடும்ப நபர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அதற்காக துடிக்கும் முதல் நபர் இவர்களாகத் தான் இருப்பார்கள்.

மற்ற விரல்களை காட்டிலும் நான்காவது விரல் சிறியதாக இருக்குமாயின் அவர்கள் தன் குடும்பத்தை பெரிதாக கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

leg

சிறிய விரல்கள் :

பொதுவாக அனைத்து விரல்களும் ஒருவரின் காலில் சிறியதாக இருக்குமாயின், அவர்கள் எப்போதும் குழந்தை தனமாக இருப்பார்கள். மற்றவர்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் மனம் இவர்களுக்கு உண்டு. அதேபோல பதவி ஆசை என்பது இவர்களுக்கு இருக்காது.

- Advertisement -