இன்று தேய்பிறை அஷ்டமி. நாய்க்கு இந்த 1 பொருளை மட்டும் சாப்பிட வைத்தாலே போதும். உங்களை பிடித்த பில்லி சூனிய செய்வினை கோளாறுகள், கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

பொதுவாகவே தேய்பிறை அஷ்டமி நாளன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இதையும் தாண்டி இந்த அஷ்டமி நாளில், மேலும் 3 சிறப்பான விஷயங்கள் அடங்கியுள்ளன. அந்த மூன்று சிறப்புகள் என்னென்ன என்பதைப் பற்றியும், தேய்பிறை அஷ்டமி நாளில் நம்முடைய கஷ்டங்கள் விலக நாய்க்கு நாம் எந்த பொருளை சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

bairavar

இன்று புதன்கிழமையோடு சேர்ந்து, அஷ்டமி வந்து இருப்பதால், இந்த அஷ்டமியை ‘புதாஅஷ்டமி’ என்று சொல்லப்படுகிறது. மகாலயத்தில் மத்தியில் இந்த அஷ்டமி வந்திருப்பதால் இதை ‘மத்திய அஷ்டமி’ என்றும் சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் தேய்பிறை அஷ்டமி என்பதால் இதை ‘சம்புக அஷ்டமி’ என்று சொல்லுவார்கள். இந்த மூன்று சிறப்புகளும் அடங்கிய நாள்தான் இந்த அஷ்டமி.

- Advertisement -

முதலாவதாக புதாஅஷ்டமி பற்றி தெரிந்து கொள்வோம். நம்முடைய ஜாதக கட்டத்தில் புதன் கெட்டு போய் விட்டால், நம்முடைய புத்தியும் கெட்டு போய்விடும் என்று சொல்லுவார்கள். புத்தி கெட்டுப் போய்விட்டால் பிறகு என்ன. நம்முடைய வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் தப்புத்தப்பாக செய்து பிரச்சனையில் சிக்கிக் கொள்வோம். புதன் பகவான் யாருக்கெல்லாம் பிரச்சனையை கொடுக்கிறாரோ, அவர்களெல்லாம் இன்றைய தினம் புதன் பகவானை வழிபாடு செய்ய வேண்டும். புதன் பகவானை ஆசீர்வாதத்தை பெற வேண்டும் என்றால் கண்ணன் வழிபாடு சிறந்தது. இன்றைய தினம் கண்ணனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் புத்தியில் தெளிவு கிடைக்கும். இது முதல் வழி.

budhan

இரண்டாவதாக உங்களுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனையை எதிர் கொள்கிறீர்கள். புத்தி சம்பந்தப்பட்ட, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உங்களுக்கு அதிகமாக உள்ளது. புத்தி மங்கிப் போய் விட்டதாக நீங்கள் உணர்ந்தால், இன்று சப்தகன்னியர் கோவிலுக்கு சென்று சப்த கன்னியரை மனதார வழிபாடு செய்து சப்த கன்னியரின் முன்பு ஒரு சிறிய மண் அகல் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுடைய புத்தியை மறைக்கக் கூடிய, கெட்டது உங்களை விட்டு விலகிவிடும். உங்களுடைய மனதும் மூளையும் தெளிவாகிவிடும்.

- Advertisement -

நிறைய பேர் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். சில பேரால் மகாளய பட்சம் முழுவதும் முன்னோர்கள் வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். மகாலய பட்சம் முழுவதும் முன்னோர்கள் வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் இன்றைய தினம், அதாவது மத்திய அஷ்டமி நாளில், மதிய நேரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பு என்று சொல்லப்பட்டுள்ளது.

tharpanam1

அடுத்தபடியாக சம்புக அஷ்டமி. சிவபெருமானின் மற்றொரு பெயர் சம்புகா என்று சொல்லுவார்கள். இன்று மாலை சிவன் கோவிலுக்கு சென்று பைரவர் வழிபாடு சிவன் வழிபாடு மேற்கொண்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நம்முடைய ஆயுள் விருத்தியாகும். பித்ரு தோஷம் விலகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

curd-rice

சரி, இறுதியாக விஷயத்திற்கு வருவோம். நாய்க்கு எந்த ஒரு பொருளைக் கொடுத்தால் செய்வினை பிரச்சனையில் இருந்தும் கடன் பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். இன்றைய தினம் பைரவரின் வாகனமாக நாய்க்கு உங்களுடைய கையால் தயிர்சாதமும், உளுந்த வடையும் செய்தும் நாய்க்கு, உங்கள் கையாலேயே சாப்பிட கொடுக்கவேண்டும்.

செய்வினை பில்லி சூனியம் கண் திருஷ்டி போன்ற கோளாறுகளின் மூலம் உங்களுக்கு பாதிப்பு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்தால், இன்றைய தினம் பைரவருக்கு அதாவது குறிப்பாக கருப்பு நாய்க்கு தயிர் சாதத்தையும் உளுந்த வடையும் பிரசாதமாக கொடுக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்து வைத்த பிரசாதத்தை நாய் சாப்பிட்டு விட்டால், உங்களை பிடித்த தரித்திரம் அனைத்தும் உங்களை விட்டு நீங்கிவிடும் என்று பைரவ புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. கருப்பு நாய் கிடைக்கவில்லை என்றால் மற்ற நாய்க்கு கொடுப்பது தவறு ஒன்றும் கிடையாது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொல்லப்பட்ட விஷயங்களை பின்பற்றி நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -