பர்ஸில் இருக்கும் கடைசி 10 ரூபாய் செலவு ஆவதற்குள், 100 ரூபாய் கை செலவுக்கு வந்து சேரும். இந்த ஒரு பொருள் உங்கள் பர்சஸுக்குள் இருந்தால்.

purse-cash
- Advertisement -

மாதம் 30 நாளும் ஒரு பரிகாரத்தை நம்மால் செய்ய முடியாது. ஆனால் மாச கடைசி, கையில் செலவுக்கு குறைவான காசு தான் இருக்கிறது. இதை செலவு செய்து விட்டால், அடுத்த சம்பளம் வரும் வரை செலவை சமாளிக்க கடன் வாங்கி தான் ஆக வேண்டும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது‌. நிறைய பணம் சம்பாதிக்கணும். வேற வழி இல்லைங்க. மாத தொடக்கத்திலேயே மாத இறுதி செலவுக்கு தேவையான காசை கண்ணுக்கு தெரியாமல் ஒரு இடத்தில் எடுத்து வைக்க வேண்டும். இப்படி செய்தால் மாத கடைசியில் நாம் கடனாளியாக நிற்க மாட்டோம். செலவுக்கு என்ன செய்வது என்று திண்டாட மாட்டோம். சரி நல்ல விஷயம் தான். இது எங்களுக்கும் தெரியும் என்று நீங்கள் யோசிப்பது நன்றாக புரிகிறது.

purse

பர்சில் பணம் சேர ஏலக்காய் பரிகாரம்:
இது தவிர இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இன்னொரு பரிகாரத்தை நாம் செய்யலாம். இதை செய்யும்போது பெருமாள், மகாலட்சுமியும் சேர்ந்து உங்களுக்கு பணம் காசை வாரி வழங்குவாங்க. பயப்படாதீங்க. மாத கடைசியில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்தால் கூட போதும். எப்போது உங்களுக்கு பணம் தட்டுப்பாடு வருதோ அப்போது 2 ஏலக்காயை எடுத்து பெருமாள் பாதங்களில் வையுங்க அல்லது மகாலட்சுமி பாதங்களில் வையுங்க.

- Advertisement -

வீட்டு பூஜை அறையில் இந்த இரண்டு தெய்வங்களின் படம் இருக்கும் அல்லவா. அவர்களுடைய பாதங்களில் இரண்டு ஏலக்காய்களை வைத்து விட்டு அதை எடுத்து பர்ஸில் வச்சுக்கோங்க. ‘கடவுளே காசு கொடு’ அப்படின்னு மட்டும் கேட்டா போதும். கையில் காசு இல்லாத சமயத்தில் அந்த எம்பெருமானும் லட்சுமி தேவியும் உங்களுக்கான பணத்தை வாரி வழங்குவார்கள்.

காசு எப்படி வரும். கூரையை பிச்சிக்கிட்டு பணம் கொட்டுமா. கட்டாயம் கிடையாது. வருமானத்திற்கு வேறு ஏதாவது ஒரு வழியை காட்டிக் கொடுப்பார்கள். அது எந்த ரூபத்தில் வரும், யார் மூலமாக வரும், எப்படி வரும் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். ஆனால், வரவேண்டிய நேரத்தில் பணம் சரியாக வந்து சேரும்.

- Advertisement -

இது சினிமா டயலாக் போல இருந்தாலும் கடவுள் சில நேரங்களில் சில திருவிளையாடல்களை நடத்தும்போது, கடவுள் இருக்கின்றான் என்பதை நிச்சயம் நாம் உணர்ந்திருப்போம் அல்லவா. அந்த நம்பிக்கையில் பண கஷ்டம் வரும்போது இந்த இரண்டு ஏலக்காய்களை பர்ஸில் வச்சு பாருங்க பிறகு நடக்கும் சம்பவங்களை நீங்களே உணர்ந்து அனுபவித்து பலனை தெரிந்து கொள்வீர்கள்‌.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு வார்த்தையை சொன்னால் போதும். தேவையான பணம், உங்களைத் தேடி வரும். ட்ரை பண்ணி பாருங்க.

ஏலக்காய் வாசம் நீங்கி ரொம்பவும் காய்ந்து போன பிறகு அதை எடுத்து செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடலாம். மீண்டும் பிரச்சினை வரும்போது புது ஏலக்காயை எடுத்து பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் எளிமையான இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -