ஜூன் 7 முதல் புதாதித்ய யோகத்தால் சிறப்பான பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்

budhan peyarchi
- Advertisement -

ஜூன் மாதம் 7 ஆம் தேதி புதன் பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த புதன் பெயர்ச்சியால் 12 ராசியினரும் பலவிதமான பலன்களை பெறுகிறார்கள் என்ற பொழுதும், இந்த மூன்று ராசியினருக்கு மட்டும் புதாதித்ய யோகம் ஏற்படுகின்றது. இந்த பூதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசியினருக்கு ஏற்படவிருக்கின்ற நற்பலன்கள் என்ன என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
தற்போது ஏற்படவிருக்கின்ற புதன் பெயர்ச்சி ரிஷப ராசியினருக்கு பூதாதித்ய யோகத்தை உண்டு பண்ணுகிறது. இந்த யோகத்தின் காரணமாக ரிஷப ராசியினருக்கு எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இந்த ராசியினர் தங்களின் பேச்சுத்திறன் மூலம் பொருள் சம்பாதிப்பார்கள். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்கள் தங்களின் சிந்தனை திறனால், புதுமைகளை புகுத்தி அதிக வருமானம் பெறுவார்கள்.

- Advertisement -

இந்த ராசியினருக்கு சற்றும் முன்பின் அறிமுகமில்லாத நபர்களின் மூலமாகவும் பொருள் வரவு உண்டாகும், தாய்மாமன் முறை உறவுகளால் சிலருக்கு பொருளாதார ரீதியிலான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆபரணம், ஆடை சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் அறிவாற்றல், திறமை காரணமாக நற்பலன்கள் கிடைக்க பெறுவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சியால் ஏற்படுகின்ற புதாதித்ய யோகம் காரணமாக தொழில், வியாபாரங்களில் சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும். புதிய வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் கூடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடுதல் வருவாயாம் ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

சிலருக்கு தந்தையின் பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதோடு, தந்தை வழி உறவுகளாலும் நன்மைகள் ஏற்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். கல்வி பயில்கின்ற மாணவர்கள் கல்வியில் பிறர் பாராட்ட தக்க நிலையை அடைவார்கள்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி பல யோகங்களை ஏற்படுத்தும். பொருளாதார கஷ்ட நிலை தீர்ந்து செல்வம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாற்றம் பெறுவார்கள். சிலருக்கு அதிகாரங்கள் மிகுந்த பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் நண்பர்களின் உதவிகளால் நல்ல லாபங்களை பெறுவார்கள்.

சிலருக்கு பெண்களால் எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். இல்லற வாழ்வில் இனிமையான நிகழ்வுகள் உண்டாகும். கோயில் கட்டுதல், திருக்குளத்தை சீர்படுத்துதல் போன்ற ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு இறைவனின் ஆசிகளை பெறுவார்கள்.

- Advertisement -