புத்திர தோஷம் பரிகாரம்

Puthira thosam Pariharam in Tamil
- Advertisement -

ஆணும் – பெண்ணும் இணைந்து மேற்கொள்கின்ற திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் கிடைப்பது அவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்த பிறகு தான். ஆனால் திருமணமான தம்பதிகள் எல்லோருக்குமே இத்தகைய புத்திர பாக்கியம் கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு பல வருடங்கள் தாமதமாகவும் புத்திர பாக்கியம் கிடைக்கின்றது. ஒரு சிலருக்கு புத்திர பாக்கியமே கிடைக்காமல் போய் விடுகின்றது. அந்த வகையில் இன்று நாம் ஜாதகத்தில் புத்திர தோஷம் ஏற்பட்டு, பிள்ளை பேறு கிடைக்காமல் தவிப்பவர்கள் செய்ய வேண்டிய புத்திர தோஷம் பரிகாரம் (Puthira Thosam Pariharam in Tamil) குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

புத்திர தோஷம் நீங்க பரிகாரம்

திருமணம் ஆகி நீண்ட வருடங்கள் ஆகியும் குழந்தை பெற இல்லாமல் வருந்துகின்ற தம்பதிகள் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயிலுக்கு சென்று, கோயில் குளத்தில் நீராடி, புத்தாடைகளை அணிந்து, கோயிலுக்குள் சென்று அம்பாளுக்கு புடவை மற்றும் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அம்பாளின் அருளால் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்கள் குழந்தை பிறந்து ஒரு வயது அடைந்தவுடன் இந்த திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு வந்து குழந்தைக்கு முடி இறக்கி, நேர்த்திக்கடன் செலுத்துவதால் குழந்தை நீண்ட ஆயுளுடன் சிறப்பான வாழ்க்கை வாழ அம்பாள் அருள் புரிவாள்.

- Advertisement -

ஜாதகத்தில் புத்திர தோஷம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் உங்களின் திருமணநாள், முன்னோர்கள் நினைவு நாள் போன்ற தினங்களில் முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களுக்கு சென்று, அங்கிருக்கும் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவு அன்னதானம் செய்வதால், அவர்களின் ஆசிகளால் ஜாதகத்தில் இருக்கின்ற புத்திர தோஷம் நீங்கி வெகு விரைவிலேயே குழந்தை பேரு கிடைக்கச் செய்யும். கோயில்களில் பசுமாடுகள் இருக்கின்ற கோ சாலைகளை சுத்தம் செய்வதாலும், அந்த கோ சாலைகளை சீரமைப்பு செய்ய உதவுவதாலும், புத்திர தோஷம் நீங்கி நல்ல அறிவாற்றல் மிக்க குழந்தை பேறு கிடைக்கச் செய்யும்.

பாலமுருகன், பாலகணபதி, பாலகிருஷ்ணன் ஆகிய தெய்வங்கள் இருக்கின்ற கோயிலுக்கோ அல்லது கோயில் சன்னதிகோ சென்று அந்த தெய்வங்களுக்கு பால் அல்லது சந்தன அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால் ஜாதகத்தில் புத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோஷம் நீங்கி, விரைவில் அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பேறு கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வாழ்வில் சிறப்பாக வாழ செய்ய வேண்டிய சுக்கிர பரிகாரம்

கந்த சஷ்டி என்பது பொதுவாக ஐப்பசி மாதத்தில் வருகின்ற விரத காலமாக உள்ளது. கந்தன் எனப்படும் முருகனுக்குரிய கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும் என்பது பல பேரின் அனுபவ உண்மையாக உள்ளது. எனினும் குழந்தை பேறுக்காக சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஐப்பசி மாதம் வரை காத்திராமல், எந்த மாதத்திலும் வருகின்ற சஷ்டி தினத்தில் சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபடலாம்.

- Advertisement -