ராம நவமி அன்று உச்சரிக்க வேண்டிய ராம மந்திரம்

ramar2
- Advertisement -

இன்று எம்பெருமான் ராமபிரான் அவதரித்த தினம். அந்த ராமரின் பரிபூரண ஆசி, பூமியில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை ராம பக்தர்களுக்காக பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம். உங்களுக்கும் ராமபிரானின் பரிபூரண ஆசி கிடைக்க வேண்டுமா. ராம நாமத்தை இன்று ஒருமுறையாவது இந்த முறைப்படி ஜபித்து விடுங்கள்.

வாழும் நாட்களில் ராமபிரானின் பரிபூரண அருளை பெறலாம். வாழ்ந்து முடிக்கப் போகும் காலத்தில் ராமரின் பாதத்தில் முத்தியையும் பெறலாம். நாம எல்லாருக்குமே தெரியும். ராமபிரானின் ஆயிரம் நாமங்களை கொண்ட பாடல் வரிகள் சேர்ந்ததுதான் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது. ஆனால் எல்லோராலும் இந்த ஆயிரம் நாமம் கொண்ட விஷ்ணு சகஸ்ரநாமத்தை படித்து விட முடியாது.

- Advertisement -

ஆனால் அதற்கு இணையாக நான்கு வரிகள் நமக்கு சிவபெருமானால் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு வரிகளை கொண்ட ராம நாமத்தை படித்தால், ராமபிரானின் ஆயிரம் நாமத்தை படித்த புண்ணியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராம நபமி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ஸ்ரீ ராம நாம வரானனே!

- Advertisement -

இதுதாங்க அந்த ராம மந்திரம். இன்று 17.4.2024 புதன்கிழமை பூஜை அறையிலேயே விளக்கு ஏற்றி இந்த ராம மந்திரத்தை வெறும் மூன்று முறை உச்சரியங்கள் போதும். அந்த ராமபிரானின் அருளாசி உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுமையாக படித்த பலனும் உங்களை வந்து சேரும்.

இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. இன்று மாலை 7 மணிக்கு முன்பாக உங்களால் எந்த நேரத்தில் இந்த ராம நாமத்தை உச்சரிக்க முடியுமோ உச்சரித்து விடுங்கள். பூஜை அறையில் விளக்கு கூட ஏற்ற முடியாது என்பவர்கள் மன சுத்தத்தோடு ஒரு முறை இந்த ராம நாமத்தை படிச்சிருங்க அந்த ராமரின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்

உங்களால் முடிந்தால் இருபது ரூபாய்க்கு துளசி வாங்கி ராமர் கோவிலுக்கு அல்லது பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விடுங்கள். உங்களால் முடிந்த இரண்டு, பேருக்காவது இரண்டு டம்ளர் நீர் மோர் வாங்கி தானம் கொடுங்க. ரொம்ப ரொம்ப நல்லது.

இன்று நீங்கள் ஒருவருக்கு தானம் செய்தாலும், ஆயிரம் பேருக்கு தானம் செய்த புண்ணிய பலனை பெற முடியும். ராமபிரானின் அருளைப் பெற புண்ணியம் நிறைந்த இந்த நாளை யாரும் தவற விடாதிங்க நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -