இந்த விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள் உங்களை ராசி இல்லாதவர்கள் என்று யாரும் இனி கூற வாய்ப்பே இல்லை!

cow-dung-ghee-bath
- Advertisement -

ஒரு சில குடும்பங்களில் சிலர் சில விஷயங்களை செய்யும் பொழுது செய்ய தடுப்பது உண்டு. அதற்கு காரணம் அவர்களுடைய ராசி சரியாக இல்லை என்று கூறுவதையும் நாம் கேட்டிருப்போம். ராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கும் பலரும் பெரிய விஷயங்களை சாதித்தது உண்டு. எந்த ஒரு ராசியிலும் கிரகங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வதில்லை. மாறிக் கொண்டே இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அவரவர் கர்ம வினைப்படி செயல்களும் நடைபெறுகின்றன. இப்படி ராசி இல்லாதவர்களை கூட, ராசியாளராக மாற்றும் அற்புத பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு சிலருக்கு படித்த வேலைக்கு ஏற்ப உத்தியோகம் கிடைக்காமல் இருக்கும். என்னதான் அவர்கள் முண்டியடித்து முயற்சி செய்தாலும் மனதிற்குப் பிடித்த வேலை அமைவதில் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படும். கிடைத்த வேலையை செய்ய மனம் அவர்களுக்கு வருவதில்லை. எப்பொழுதும் ஒரு வேலையில் இருந்து கொண்டு இன்னொரு வேலையைத் தேட வேண்டுமே தவிர வேலையை விட்டுவிட்டு தேடுவது முறையல்ல! அதே போல கிரகங்களின் சஞ்சாரம் பொறுத்து வேலை அமையும் என்பதால் கிடைத்த வேலையை பற்றிக் கொள்வது நல்லது.

- Advertisement -

வேலை தான் இப்படி என்றால் ஒரு சிலருக்கு எல்லாமே அப்படித்தான் இருக்கும். அவர்கள் செய்யும் எந்த ஒரு செயலும் தோல்வியை தழுவும். வெற்றியை நெருங்கக் கூட அவர்களால் முடிவதில்லை. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல ஆரம்பமே இவர்களுக்கு ஏடாகூடமாக அமைந்துவிடும். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நான் ராசி இல்லாதவன் என்று நமக்கே நம் மீது தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது.

சிலருக்கு தொடர்ந்து திருமணத்தில் தடை ஏற்படுகிறது. இதற்கு தோஷம் காரணமாக கூறப்படுகிறது. அழகு, அறிவு, திறமை இருந்தும் இவர்களுடைய ராசிக்கு திருமணம் ஆவதில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் இந்த பரிகாரத்தை செய்யலாம். இப்படி உங்கள் ராசியை சார்ந்து ஒரு விஷயம் உங்களுக்கு நடக்காமல் போனால் செய்ய வேண்டிய பரிகாரம் தான் இது.

- Advertisement -

எண்ணெயில் எப்பொழுதும் நல்லெண்ணெய் சிறந்ததாக கூறப்படுகிறது. ஆன்மீகம், பரிஹாரம் போன்ற விஷயங்களுக்கு சுத்தமான நல்லெண்ணெயை பயன்படுத்தி செய்வதால் பலன்கள் முழுமையாக நமக்கு வந்தடையும். அந்த வகையில் இந்த பரிகாரம் செய்ய கொஞ்சம் நல்லெண்ணையை உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். உச்சி முதல் பாதம் வரை நல்லெண்ணெய் மசாஜ் செய்த பின்பு பஞ்சகவ்யம் கொஞ்சம் எடுத்து இதே போல உடலில் தேய்த்து, சுடு தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து குளித்து விட வேண்டும். குளிக்கும் பொழுது கங்காஸ்நானம் செய்வதாக நினைத்து கங்கா தேவியை மனதில் நினைத்து போற்றிக் கொள்ள வேண்டும்.

பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை வைத்து செய்யப்படும் ஒரு தெய்வீக அம்சம் பொருந்திய விஷயமாகும். நாட்டு மருந்து கடைகள் அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் பஞ்சகவ்யம் என்று கேட்டாலே உங்களுக்கு கிடைக்கும். அல்லது நீங்களே கூட இதனை தயாரிக்கலாம். பசு கோமியம், பசு நெய், பசும்பால், பசுந்தயிர், பசுஞ்சாணம் ஆகிய ஐந்து பொருட்களை சம அளவில் கலந்து வைத்துக் கொண்டால் பஞ்சகவ்யம் தயார். பெண்கள் என்றால் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் என்றால் சனிக்கிழமைகளிலும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். செய்துவிட்டு அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்ய உங்களுக்கு இருக்கும் தோஷங்கள் அத்தனையும் நீங்கி நீங்களும் ஒரு ராசியாளர்களாக மாறிவிடுவீர்கள்.

- Advertisement -