வீட்டில் இந்த எலி தொல்லையில் இருந்து தப்பிக்கவே முடியவில்லையா? காருக்கு அடியில், ஒயர் எல்லாம் கடித்து அட்டகாசம் செய்கிறதா? இந்த 1 பொருளை வைத்து அந்த எலியை அடித்து துரத்தலாமே.

rat1
- Advertisement -

சில பேர் வீடுகளிலும் இந்த எலியின் அட்டகாசம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கும். எலி உள்ளே வரக்கூடிய வழி கூட நமக்கு தெரியும். ஆனால் அந்த எலியை பொறி வைத்து பிடிக்கவே முடியாது. எலியெல்லாம் இப்போது உஷாராக இருக்கிறது. சில வீடுகளில் வெளியில் கார் ஷெட்டில், கார் நிறுத்தி வைத்திருப்பார்கள் அந்த இடத்தில் எலியின் அட்டகாசம் ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கும். தினமும் காருக்கு அடியில் டயர் மேலே ஏறி சென்று, ஏதாவது ஒரு ஒயரை கடித்து சேதப்படுத்திவிடும். செலவு வைத்து விடும். உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருந்தால், பின் சொல்லக்கூடிய குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக இந்த எலியின் அட்டகாசத்தை நிறுத்தி விடலாம்.

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மாவு – 2 ஸ்பூன், நெய் – 2 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலை – 10, பொடி செய்த மாத்திரை – 2, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு சப்பாத்தி மாவு போல பிசைந்து இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். இதுதான் எலி மருந்து. உங்கள் வீட்டில் இருக்கும் காய்ச்சல் மாத்திரை அல்லது இருமல் சளிக்கு போடக்கூடிய மாத்திரை இவைகளை நன்றாக நசுக்கி தூள் செய்து 2 மாத்திரைகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிறைய மாத்திரை வைத்தாலும் மாத்திரை வாசத்தில் எலி இதை சாப்பிடாது. குறைந்த அளவு மாத்திரை வைத்தாலும் இந்த டிப்ஸ் ஒர்க் அவுட் ஆகாது. (அதேபோல நெய்யை ஊற்றி இந்த கலவையை பிசைய வேண்டும் தண்ணீர் ஊற்றாதீங்க.)

- Advertisement -

தயார் செய்த இந்த சின்ன சின்ன உருண்டைகளை எலி வரக்கூடிய இடத்தில் வைத்து விடுங்கள். கார் பார்க்கிங்காக இருந்தால் 4 டயருக்கு மேலேயும் இந்த உருண்டையை ஒவ்வொரு உருண்டையாக வைத்து விடுங்கள். இதில் இருக்கும் நெய் கடலை மாவு வாசத்திற்கு எலி அப்படியே இதை சாப்பிட்டு விடும். சாப்பிட்ட இடத்திலிருந்து தலைத் தெறிக்க ஓடிவிடும். திரும்பவும் அந்த இடத்திற்கு எலி வரவே வராது.

இதே போல உங்கள் வீட்டிற்கும் எலி வந்தாலும் சரி, அடிக்கடி வந்து உணவுப் பொருட்களை சாப்பிட்டாலும் சரி, அந்த இடங்களில் இந்த உருண்டைகளை வைக்க வேண்டும். ஆனால் குழந்தைகள் இருக்கக்கூடிய வீடாக இருந்தால் இதை நீங்கள் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் இதை உணவு தின்பண்டம் என்று நினைத்து எடுத்து சாப்பிட்டு விடும். இரவு குழந்தை தூங்கிய பின்பு இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன், குழந்தை கண்விழிப்பதற்கு முன்பாகவே, வைத்த இடத்தில் இருக்கும் இந்த உருண்டையை எலி சாப்பிடவில்லை என்றால் அதை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும் ஜாக்கிரதை. (எத்தனை உருண்டை தயார் செய்கிறீர்கள் என்று கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.)

- Advertisement -

அதேபோல இந்த உருண்டைகளை வைத்து விட்டு அந்த இடத்துக்கு பக்கத்தில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளியலறை கழிவறை சமையலறை போன்ற இடங்களில் எலித்தொல்லை இருக்கும். அந்த இடத்தில் இப்படிப்பட்ட உருண்டைகளை வைக்கும் போது அந்த இடம் காய்ந்த இடமாக இருக்க வேண்டும். இதை சாப்பிட்டு விட்டு எலி அங்கேயே பக்கத்தில் இருக்கும் தண்ணீரை குடித்து விட்டாலும் இந்த டிப்ஸ் சரியாக ஒர்க் அவுட் ஆகாது.

காருக்கு டயர் பக்கத்திலும், டயர் மேலையும் இதை வைக்கலாம். காருக்கு உள்ளேயும் இதை வைத்து விடுங்கள். சில சமயம் காருக்கு உள்ளே வந்த எலி இதை சாப்பிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இவ்வளவு முயற்சிகளை எடுக்க முடியவில்லை என்றாலும், நெய் மைசூர் பாக் வாங்கினால் அதில் மாத்திரையை தூள் செய்து கலந்து வைத்தால் கூட எலி வந்து எடுக்கும். ஏனென்றால் கடலை மாவு நெய் இந்த வாசம் எலிக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -