மல்லிகைப் பூ மாதிரி உங்களுடைய முகம் பார்ப்பதற்கு எப்போதுமே வெள்ளையாக இருக்க 1 ஸ்பூன் அரிசி போதும்.

face7
- Advertisement -

நீங்க பவுடர் போட்டாலும், போடாவிட்டாலும் மேக்கப் போட்டாலும் போடாவிட்டாலும் உங்களுடைய முகம் பார்ப்பதற்கு எப்போதுமே பொலிவாக இருக்க வேண்டும் என்றால், தினமும் இந்த கிரீமை முகத்தில் தடவி வர வேண்டும். நாம் தயார் செய்யப் போகும் இந்த கிரீமை ஃபேஸ்பேக் ஆகவும் பயன்படுத்தலாம். நைட் கிரீம் ஆகவும் பயன்படுத்தலாம். இல்லையென்றால் குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேய்த்துக் குளித்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். நம்முடைய சருமத்தை பொலிவாக்க கூடிய அந்த க்ரீம் எப்படி தயார் செய்வது தெரிந்து கொள்வோமா.

முதலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் எந்த அரிசி இருக்கின்றதோ, அதை இந்த பேக் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். அரிசியை சிறிய கிண்ணத்தில் போட்டு, 2 முறை நன்றாகக் கழுவி விட்டு அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 8 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அடுத்து ஒரு மீடியம் சைஸ் இருக்கும் உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை தண்ணீரோடு சேர்ந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் அந்த அரிசியோடு போட்டுப் மிக்ஸியை ஓட விடுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். அரிசி ஊறவைத்த தண்ணீரை போதுமானதாக இருக்கும். ஊற வைத்த அரிசியும் உருளைக்கிழங்கும் சேர்ந்து, அறைந்து நமக்கு லிக்விட் ஆக ஒரு கலவை கிடைத்திருக்கும் அல்லவா? வெள்ளை நிறத்தில். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அப்படியே அடுப்பில் வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து 30 செகண்டு வரை சூடு செய்தால் போதும். (கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். கட்டி பட்டுவிடும்.)

அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தில் இருக்கும் சூட்டிலேயே கலக்க கலக்க இந்தப் பேக் ஜெல்லி போல திக்காக நமக்கு கிடைத்திருக்கும். இதை நன்றாக ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் 7 நாட்கள் பயன்படுத்தலாம். முதலில் சொன்னது போல தான். இதை முகத்தில் மூன்று விதங்களில் நாம் போட்டுக் கொள்ளலாம்.

- Advertisement -

இதை நைட் ஜெல்லாக பயன்படுத்த வேண்டும் என்றால் இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு சொட்டு இந்த ஜெல்லை தொட்டு உங்களுடைய முகம் முழுவதும் ஆங்காங்கே சிறு சிறு புள்ளிகளாக வைத்து, அப்படியே கிரீம் போல நன்றாக தடவி மசாஜ் செய்து அப்படியே தூங்கச் செல்லுங்கள். மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவி கொள்ள வேண்டும்.

குளிப்பதற்கு முன்பு குளியல் அறையில் இந்த கிரீமை முகம் கை கால்களில் தடவி, 5 நிமிடங்கள் போல நன்றாக மசாஜ் செய்து விட்டு, 5 நிமிடம் ஊற வைத்து விட்டு, அதன் பின்பு நன்றாக தேய்த்து குளித்தாலும் சரி அது உங்களுடைய விருப்பம். இப்படி செய்தால் உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும்.

15 நிமிடங்கள் இதை முகத்தில் பேக் ஆகப் போட்டு கொண்டு அதன் பின்பு முகத்தை கழுவி கொண்டாலும் சரி, அதுவும் உங்களுடைய விருப்பம். இந்த கிரீமை எப்படி பயன்படுத்தினாலும் உங்களுடைய முகம் ஒரு சில நாட்களிலேயே வெள்ளையாக மாற தொடங்கும். குறிப்பாக கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் இருக்கும் முகப்பரு வந்த தழும்புகள், எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகும். தினமும் இந்த கிரீமை பயன்படுத்தலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -