அரிசி மாவை முகத்தில் இப்படி போட்டால், அரசி போல அழகாக மாறிடுவீங்க. தங்கம் போல ஜொலிக்க, தரமான ஃபேஸ் பேக் இது.

face1
- Advertisement -

மகாராணி போல உங்களுடைய முகம் மிளிர வேண்டும் என்றால் இந்த குறிப்பு ஒன்று போதும். முகத்தில் இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து உங்கள் முகத்தை தங்கம் போல ஜொலிக்க வைக்கும். முகத்தில் இருக்கும் முகப்பரு, கரும்புள்ளி, முகச்சுருக்கம், பிக்மென்டேஷன், சன்டேன் இவைகளை சரி செய்யவும் கூட செலவே இல்லாத ஒரு பேக் தான் இது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரும அழகை அதிகப்படுத்த பேக் தயார் செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா.

இந்த பேக் தயார் செய்ய நமக்கு மூன்றே பொருட்கள்தான் தேவை. பழுத்த வாழைப்பழம், தேன், அரிசி மாவு. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த ஒரு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி போட்டுக் கொள்ளுங்கள். அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன் போட்டு, 2 ஸ்பூன் தேன் ஊற்றி, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். கட்டிகள் இருக்கக் கூடாது. அப்பொழுதுதான் ஸ்மூதாக முகத்தில் இதை அப்ளை செய்ய முடியும்.

- Advertisement -

முகத்தை சுத்தமாக கழுவி துடைத்துவிட்டு அதன் பின்பு இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் திக்காக போட்டுக்கொள்ள வேண்டும். பேக் காயும் வரை 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின்பு முகத்தில் இருக்கும் ஃபேஸ் பேக்கை தண்ணீரில் நனைத்து விட்டு, முகத்தை கழுவி விட வேண்டும். முகத்தை கழுவும் போது எக்காரணத்தைக் கொண்டும் ஸ்கரப் செய்து கழுவக்கூடாது. அப்படியே லேசாக கழுவி விடுங்கள்.

வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை போடலாம். திடீரென்று  வெயிலில் சென்று விட்டீர்கள். உங்களுடைய முகம் கை கால்கள் எல்லாம் கருத்துப் போய்விட்டது எனும் பட்சத்தில் இதே ஃபேஸ் பேக்கில் 1 ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து, அப்படியே கை கால்களில் போட்டு 20 நிமிடங்கள் விட்டுவிடுங்கள். சன் டேன் நீங்கிவிடும். சருமம் பொலிவாக மாறுவதற்கு இந்த பேக் ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும். (சில பேருக்கு எலுமிச்சை பழச்சாறு போட்டால் முகத்தில் அலர்ஜியாகும். ஆனால் கை கால்களில் எலுமிச்சை பழச்சாறு பயமில்லாமல் போடலாம்.)

- Advertisement -

எல்லா விதமான சருமத்திற்கும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். ஆனால் பழுத்த வாழைப்பழத்தை இந்த குறிப்புக்கு பயன்படுத்துங்கள். தேன் சுத்தமான தேனாக பார்த்து கொஞ்சம் வாங்கிக் கொண்டால் ரிசல்ட் இரண்டு மடங்கு நமக்கு கிடைக்கும். கடைகளில் விற்கக்கூடிய மலிவான தேனை குறிப்புக்கு பயன்படுத்தாதீர்கள். அந்த அளவிற்கு பலன் உடனடியாக கிடைக்காது.

கூடுமானவரை சன் டேன் ஆகாமல் இருக்க முகத்துக்கு சன் ஸ்கிரீன் போட்டு கொண்டு வெளியே செல்ல வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய சருமத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். வெயில் சமயங்களில் நிறைய தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். உடலின் நீர் சத்து குறைந்தாலும் நம்முடைய சருமத்தில் பிரச்சனை வரும். முகத்திற்கு பேக் போடுவதோடு சேர்த்து உடலுக்கு ஆரோக்கியம் தரும் நீர் சத்தை கொடுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்த காய்கறிகள் பழங்களை சாப்பிட்டு வாருங்கள். அப்போது பேக்கின் மூலம் கிடைக்கக்கூடிய ரிசல்ட் இரட்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -