இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரேயான ஒருநாள் தொடர் நேற்று முடிந்தது.இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி (3-2) என்ற கணக்கில் கைப்பற்றியது.இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களை வென்ற இந்திய அணி கடைசி 3 ஆட்டங்களையும் தோற்று தொடரை இழந்தது.
இந்நிலையில் நேற்று நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரேயான போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா சிறப்பான சாதனை ஒன்றினை படைத்தார். நேற்றைய போட்டியில் ரோஹித் 56 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 8000 ரன்களை கடந்து சிறப்பான சாதனையை படைத்தார்.
இந்திய அணிக்காக இதுவரை 206 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 8010 ரன்களை குவித்துளார். இதில் 22 சதங்களும் 41 அரைசதங்களும் விளாசியுள்ளார். மேலும், அதிகபட்சமாக 264 ரன்களை அடித்துள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையும் ரோஹித் வசமே உள்ளது.
Congratulations @ImRo45 on completing 8000 runs in ODI cricket ?? pic.twitter.com/qCpi2KgfrZ
— BCCI (@BCCI) March 13, 2019
ரோஹித் சர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகவும் உள்ளார்.இந்த மாத இறுதியில் ஐ.பி.எல் தொடர் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே :
மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்