செய்வினை ஏவல் பில்லி சூனியத்தை விட இந்த ஒரு விஷயம் பெரிய கஷ்டத்தை கொடுக்கும். ஆகவே இதை நீங்கள் யாருக்கும் கொடுக்காதீங்க. இதை யார்கிட்ட இருந்தும் நீங்க வாங்கிக்காதீங்க.

sivan-vilakku
- Advertisement -

ஏவில், பில்லி, சூனியத்தை விட ஒரு பெரிய கொடுமை இந்த உலகத்தில் இருந்தால் அது என்னவாக இருக்கும் என்ற கேள்வி நிச்சயம் நம் எல்லோர் மனதிலும் இருக்கும். இப்படியாக கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விட, மனித உருவில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆத்ம சக்திக்கு இந்த உலகத்தில் பவர் அதிகம் இருக்கிறது. அது எது தெரியுமா. மனிதனுடைய நாக்கு. வயிறெரிந்து ஒரு மனிதர், அடுத்தவர்களுக்கு விடக்கூடிய சாபம். உண்மையாகவே கஷ்டப்பட்டு ஒருவர் இன்னொருவருக்கு சாபம் கொடுத்து விட்டால் அந்த சாபம் இன்றைக்கு இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் நிச்சயமாக பலிக்கும்.

ஏவல் பில்லி சூனியத்தை விட ரொம்ப ரொம்ப மோசமானது இந்த சாபம். அதை விருப்பப்பட்டு நாம் யாருக்கும் கொடுக்கப் போவது கிடையாது. ஆனால் கோபத்தில் நிதானமாக இருக்க வேண்டும். கோபம் வரும்போது கூட வயிறு எரிந்து அடுத்தவர்கள் குடும்பம் நன்றாக வாழக்கூடாது என்று சாபம் கொடுத்துடாதீங்க. அதேபோல அடுத்தவர்கள் சாபம் கொடுக்கும்படி நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள்.

- Advertisement -

ஏதோ ஒரு தருணத்தில், நம் குடும்பத்திற்கும், யாரோ விட்ட சாபம் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த சாபத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்யலாம். அந்த காலத்தில் சித்தர்கள் சொன்ன ஒரு சின்ன பரிகாரம் உள்ளது. அதை இப்போது பார்ப்போம். கருஞ்சீரக எண்ணெய், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். வெட்டிவேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

ஒரு சுத்தமான பாத்திரத்தில் இந்த கருஞ்சீரக எண்ணெயை ஊற்றி, கொஞ்சமாக வெட்டிவேரை அதில் போட்டு லேசாக சூடு செய்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தொட்டு உங்களுடைய காதில் தடவிக் கொள்ளுங்கள். காது ஓட்டை உள்ளே தடவ வேண்டாம். காதுக்கு ஓட்டைக்கு மேல் பக்கம் உள்ள பகுதிகளில் எல்லாம் இந்த எண்ணெயை லேசாக தடவி விட்டுக் கொள்ளுங்கள். (லேசாகத்தான் தடவ போகின்றோம். அடுத்த நாள் குளிக்கும்போது அது போய்விடும். துடைத்து எடுக்க வேண்டும் என்று அவசியம் எல்லாம் கிடையாது.)

- Advertisement -

குறிப்பாக இந்த பரிகாரத்தை அஷ்டமி நவமி தினத்தில் செய்ய வேண்டும். அந்த எம்பெருமானை மனதில் நினைத்துக் கொண்டு சிவ சிவ என்று சொல்லி இந்த எண்ணெயை காதில் தடவி கொள்ளுங்கள். குடும்பத்திற்கு இருக்கக்கூடிய சாபங்கள் எல்லாம் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இனி அறிந்தும் அறியாமலும் அடுத்தவர்களுக்கு எந்த தீங்கையும் நினைக்க மாட்டேன் என்ற உறுதி மொழியையும் மனதார மேற்கொள்ள வேண்டும்.

அடுத்தவர்கள் விட்ட சாபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பிரச்சனையிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நம்முடைய முன்னோர்கள், அடுத்தவர்கள் சாபம் விடும்படியான செயல்களை செய்திருப்பார்கள். அவர்களுக்கு சாபம் கிடைத்திருக்கும். அந்த சாபத்தால் அவர்களுடைய பரம்பரையை நன்றாக வாழாது. அந்த குடும்பத்தின் அடுத்த அடுத்த சந்ததியினரை பாதிக்கும். அப்படிப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் நம்முடைய குடும்பத்திற்கு வரக்கூடாது என்றால் அடுத்தவர்கள் சாபம் கொடுக்கும்படி நாம் வாழக்கூடாது. இதை முதலில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரிய அளவில் சாபம் இருந்து உங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெளிவர சித்தர்களால் சொல்லப்பட்ட இந்த சின்ன பரிகாரம் உதவியாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -