எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டும் குணப்படுத்த முடியாத, என்னவென்று கண்டுபிடிக்கமுடியாத நோயைக் கூட 15 நிமிடத்தில் குணப்படுத்தும் சுலபமான முத்திரை.

mudra2
- Advertisement -

தீராத உடல் உபாதைகள் வருவதற்கு முதல் காரணம் பஞ்சபூத சக்திகள் நம்முடைய உடம்பில் சரிவர இயங்காமல் இருப்பதுதான். நம்முடைய ஐந்து விரல்களில் பஞ்ச பூதங்களின் சக்தியும் அடங்கியிருக்கின்றது. நம் உடம்பில் உள்ள பஞ்சபூத ஆற்றலை சரியான முறையில் இயங்க வைத்து உடல் உபாதைகளைக் கட்டுப்படுத்தி, சுறுசுறுப்பாக மனிதர்களை இயங்க வைக்க இந்த முத்திரை பயன்படுத்தப்படுகின்றது.

நிறைய பேருக்கு மூட்டுவலி கழுத்துவலி முதுகுவலி என்ற பிரச்சனைகள் உள்ளது. இந்த வியாதிகளுக்கெல்லாம் எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் அது தீரவே தீராது. இப்படிப்பட்டவர்கள் இந்த முத்திரையை பயிற்சியை முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக விளையாட்டு துறையில் இருப்பார்கள், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், நீச்சல் வீரர்கள், பலு தூக்குபவர்கள் குத்துச்சண்டை வீரர்கள், இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தினமும் காலையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டால் அவர்களுடைய உடலும் மனமும் எப்போதும் சோர்வடையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த முத்திரையை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் செய்யலாம்.

ஓய்வே இல்லாமல் ஒரு சிலருக்கு வேலை இருக்கும். அதாவது உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்படியான வேலையை செய்பவர்கள் காலை எழுந்தவுடன் ஒரு 15 நிமிடம் இந்த முத்திரையை பயிற்சி செய்துவர அவர்களுடைய உடல் சோர்வடையாமல் இருக்கும்.

- Advertisement -

இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட அந்த முத்திரையை பற்றி பார்த்து விடுவோமா. இந்த முத்திரையின் பெயர் சமான முத்திரை. இந்த முத்திரையை இரண்டு கைகளிலும் பிடிக்க வேண்டும். கீழே படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு உங்களுடைய கைகளை வைத்துக் கொள்ளவேண்டும். அதாவது ஐந்து விரல்களையும், குவித்து ஒரே இடத்தில் வைக்க வேண்டும். ஐந்து விரல்களும் சேரும் இடத்தில் லேசாக அழுத்தம் கொடுத்து கொடுத்து எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து விடுங்கள். முகம் கை கால்களை அலம்பிக்கொண்டு, கிழக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகு தண்டுவடம் நேராக இருக்கட்டும். இரண்டு கைகளும் வலிக்காமல் இருக்க இரண்டு கைகளையும் தொடையின் மேல் வைத்துக்கொள்ளலாம். தவறு கிடையாது. அதன் பின்பு இரண்டு கைகளிலும் இந்த சமான முத்திரையை வைத்துக்கொண்டு, 15 நிமிடங்கள் போல அப்படியே அமர்ந்திருக்கலாம்.

- Advertisement -

இந்த முத்திரையை கையில் பிடித்திருக்கும் போது உங்களுடைய மனதிற்கு பிடித்தமான மந்திரத்தை உச்சரிக்கலாம். சுலபமான மந்திரங்கள் இருக்கிறதல்லவா? ‘ஓம்’ மந்திரத்தினை உச்சரிக்கலாம். ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்கலாம். அல்லது உங்களுக்கு பிடித்த மந்திரத்தை ஒலிக்கச் செய்து குறைந்த சப்தத்தில் அதை கேட்கலாம்.

விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள் கடினமான வேலை செய்பவர்கள் அடிக்கடி உடல் சோர்வு மனச்சோர்வு ஏற்படுபவர்கள் இந்த முத்திரையை 20 நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரையை சாப்பிடுபவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் எல்லாம் 15 நிமிடங்கள் வரை இந்த முத்திரைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். (தரையில் சம்மணம் போட்டு அமர முடியாத வயதானவர்கள், நாற்காலி, சோபாவில் அமர்ந்து இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.)

தொடர்ந்து 30 நாட்கள் இந்த முத்திரையை பயிற்சி செய்து பார்த்து உங்களுடைய ஆரோக்கியத்தில் என்ன முன்னேற்றம் தெரிகிறது என்பதை நீங்களே உணர்ந்து பாருங்கள். அப்போதுதான் முத்திரையின் பலனை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

- Advertisement -