இந்த சின்ன சின்ன டிப்ஸ்கள் உங்களுக்கு தெரிந்தால் போதும். நீங்களே உங்களை பாராட்டி கொள்ளலாம். அந்த அளவிற்கு சமையலில் கை தேர்ந்தவர்களாகிருப்பீர்கள்.

cooking1
- Advertisement -

சமையல் என்னும் வார்த்தைக்குள் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. சமையல் என்பது மிகவும் சாதாரண விஷயமல்ல. சமைப்பதற்கு சரியான பக்குவம் தெரிந்தால் மட்டுமே சுவையாக சமைக்க முடியும். சில நேரங்களில் எவ்வளவு கவனமாக சமைத்தாலும் சில தவறுகள் நடக்க தான் செய்யும். அப்போது சமைத்த உணவினை எப்படி வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பிட கொடுக்க முடியும் என்ற டென்ஷன் அதிகமாகி விடும். அந்த நேரங்களில் சமையலில் இருக்கும் தவறுகளை சரிசெய்ய சின்ன சின்ன டிப்ஸ்களை தெரிந்து வைத்துக்கொண்டால் போதும். உடனே அவற்றை சரிசெய்து கொள்ளலாம். வாருங்கள் உங்களுக்கு தேவையான அந்த டிப்ஸ்கள் என்னென்ன என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

idly-maavu

இட்லிக்கு உளுத்தம் மாவு அரைக்கும் பொழுது பிரிட்ஜில் வைத்த தண்ணீரை சிறிதளவு சேர்த்து அரைத்து பாருங்கள். மாவு நன்றாக பொங்கி வரும். அரிசிமாவுடன் இந்த உளுத்தமாவை கலந்து இட்லி சுடும் பொழுது மிருதுவான பஞ்சு போன்ற இட்லி கிடைக்கும்.

- Advertisement -

இட்லி மாவு அதிகமாக புளித்து விட்டது என்றால் அதில் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைத்துவிட வேண்டும். பிறகு மேலே நிற்கும் தண்ணீரை மற்றும் வடித்து விட்டு மாவினை நன்றாக கலக்கி விட்டு தோசை சுட ஆரம்பித்தால் புளிக்காத தோசை தயாராகிவிடும். இன்னும் சிலர் அவசரமாக தோசை சுட வேண்டும் என்று நினைத்தால் அரை டம்ளர் பால் சேர்த்து நன்றாக கலக்கி விட்டு பிறகு தோசை சுட்டால் புளிப்பு தன்மை சற்று குறைந்து இருக்கும்.

சப்பாத்தி சாஃப்ட்டா, மிருதுவாக இருக்க வேண்டுமென்றால் சப்பாத்தி மாவு பிசையும் போது சுடு தண்ணீரும், பாலும் சேர்த்து ஒரு முறை பிசைந்து பாருங்கள். சப்பாத்தி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.

- Advertisement -

சப்பாத்தி மீதியாகிவிட்டால் கவலைப்பட வேண்டாம். அவற்றை வெயிலில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் சுவையான வத்தல் போன்ற சுவையுடன் இருக்கும்.

ven-pongal1

வீட்டில் வெண் பொங்கல் செய்யும் பொழுது அதில் இருக்கும் மிளகினை குழந்தைகள் தனியாக எடுத்து வைத்துவிட்டு சாப்பிடுவார்கள். ஆனால் மிளகு உடலுக்கு மிகவும் நன்மையை கொடுக்கும். எனவே மிளகை லேசாக வறுத்து பொடிசெய்து பொங்கலுடன் சேர்த்து சமைத்துக் கொடுங்கள்.

- Advertisement -

அரிசியில் சிறிது அளவு கறிவேப்பிலையை போட்டு வைத்தால் பூச்சிகள், வண்டுகள் அரிசியில் வராமல் இருக்கும்.

பால் திரிந்து போகாமல் இருக்க 4 அல்லது 5 நெல் விதைகளைப் பாலில் போட்டு வைத்தால் வெயில் காலத்திலும் பால் திரிந்து போகாமல் இருக்கும்.

milk

சாம்பார் காரக்குழம்பு இவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டால் குழம்பு நல்ல வாசனையுடனும் காரம் குறைந்து இருக்கும். ஆனால் குருமா மற்றும் ஏதேனும் கிரேவியில் காரம் அதிகமாகிவிட்டால் அவற்றில் வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் சூடு படுத்தினால் காரம் குறைந்துவிடும்.

அதேபோல் சில சமயங்களில் குழம்பில் புளிப்பு அதிகமாக இருந்தால் சிறிய துண்டு வெல்லத்தை அதனுடன் சேர்த்தால் போதும் புளிப்பு சுவை குறைந்து குழம்பு நன்றாக இருக்கும்.

coconut-sambar

பாயாசம் செய்யும் பொழுது அது தண்ணீர் போன்று நீர்த்து விட்டால் சிறிதளவு சோளமாவு அல்லது பால் பவுடரை தண்ணீரில் கரைத்து பாயாசத்துடன் சேர்த்து கொதிக்க வைத்தால் போதும் உடனே சரியாகிவிடும்.

- Advertisement -