வெள்ளிக்கிழமையில் பணத்திற்கு இதை காட்ட கடன் அடைந்து வருமானம் பெருகும்! செல்வம் செழிக்க நம் முன்னோர்கள் செய்த சூட்சும பரிகாரம்.

sambrani-cash
- Advertisement -

வெள்ளிக்கிழமையில் வழக்கமாக பூஜைகள் செய்வது அனைவருடைய பழக்கமாக இருந்து வருகிறது. பக்தி பெருக்குடன் வெள்ளிக்கிழமைகளில் அனைத்து வீடுகளிலும் விளக்கு ஏற்றி பூஜைகள் செய்வது விசேஷமானது. அப்படி நீங்கள் செய்யும் பூஜையில் கட்டாயம் இது இடம் பெற வீட்டில் செல்வ செழிப்பாக இருக்கும். மேலும் வீட்டில் இருக்கும் துர்தேவதைகள் நம் வீட்டை விட்டு விலகிச் செல்வார்கள் என்பது நியதி. இந்த வகையில் வெள்ளிக்கிழமையில் நாம் கட்டாயம் காண்பிக்க வேண்டியது என்ன? அதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

coconut-shell-fire

பொதுவாக முந்தைய காலங்களில் நம் முன்னோர்கள் வீடு முழுவதும் கொட்டாங்குச்சியை எரித்து தணல் போல் ஆக்கி அதன் மீது சாம்பிராணி பொடியை தூவி அதிலிருந்து வரும் புகையை வீடு முழுதும் பரவ செய்வார்கள். பூஜை அறையில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் அந்த புகையை காண்பிப்பது வழக்கம். வீடு முழுவதும் சாம்பிராணி புகை பரவும் பொழுது அங்கு துர்தேவதைகளின் ஆதிக்கம் விலகும்.

- Advertisement -

அறிவியல் ரீதியாக வீட்டில் இருக்கும் விஷக்கிருமிகள் வெளியேறவும், ஆன்மீக ரீதியாக வீட்டில் இருக்கும் துர் சக்திகள் வெளியேறவும் இது போல் தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது சாம்பிராணி தூபமிட்டு வந்தனர். ஆனால் இன்று இந்த நடைமுறை மாறி செயற்கையாக கம்ப்யூட்டர் சாம்பிராணிகளை ஏற்றி வைத்து அதிலிருந்து வரும் புகையை சுவாசித்து ஆஸ்துமா போன்ற பல நோய்களால் அவதிப்பட வேண்டி இருக்கிறது. எனவே சுத்தமான சாம்பிராணியை வாங்கி கொட்டாங்குச்சியை எரித்து அதன் தனலில் சாம்ப்ராணி பொடியை தூவி அதிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் பரவச் செய்யுங்கள்.

கட்டாயம் வெள்ளிக்கிழமையில் சாம்பிராணி போட்டு வர வீட்டில் இருக்கும் எல்லா நேர்மறை சக்திகள் பெருகும், எதிர்மறைகள் விலகும் என்பதை நீங்களே உணர்வீர்கள். எதிர்மறை சக்திகள் இருக்கும் பொழுது அங்கு சண்டை, சச்சரவுகளும், வருமான குறைபாடும் ஏற்படுகிறது. மேலும் கடன் பிரச்சினையால் அவதிப்படுவும், எதிர்மறை ஆற்றல் தான் காரணம். தீய சக்திகளை அழிக்கும் சக்தி சாம்பிராணி புகைக்கு உண்டு. மேலும் நாம் செல்வ வளத்துடன் செழிப்பாக இருக்க நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த பெட்டிக்குள் பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம், மாதுளை குச்சி, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை போட்டு வைக்கலாம். வெள்ளிக் கிழமையில் நீங்கள் அதற்கும் சேர்த்து எப்பொழுதும் தூப, தீபம் காண்பிக்க வேண்டும். எதுவுமே செய்ய விட்டாலும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது நீங்கள் சம்பாதித்த பணத்தை பூஜையில் வையுங்கள். அதற்கு தூப, தீபத்தை காண்பித்து சாம்பிராணி புகை போடுங்கள். இவ்வாறு செய்வதால் பணமானது மென்மேலும் பெருகும் என்கிறது சாத்திரம்.

sambrani

எனவே சாம்பிராணி புகையை பணத்திற்கு காண்பித்து அதனை பன்மடங்கு பெருக்க செய்யலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த புகை ஒவ்வாது என்று கூறுவது உண்டு. ஆனால் கொஞ்சமாக புகை போட்டு கட்டாயம் பச்சிளம் குழந்தைகளுக்கு உச்சந்தலையில் காண்பிக்க சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும். இறைசக்தி பெருக, பணம் கொழிக்க இந்த சாம்பிராணி புகையை இனியும் தொடர்ந்து வீடுகளில் போடுவதை மறக்க வேண்டாமே!

- Advertisement -