செல்வ வளம் பெருக பெண்கள் செய்ய வேண்டிய பூஜை

friday poojai
- Advertisement -

வீட்டில் இருக்கக்கூடிய பெண்களை மகாலட்சுமியாக கருத வேண்டும் என்று கூறுவார்கள். அதனால் தான் வீட்டில் பிறக்கக்கூடிய பெண் பிள்ளைகளை மகாலட்சுமி என்றும் புதிதாக புகுந்த வீட்டிற்கு வரக்கூடிய மருமகளை எங்கள் வீட்டு மகாலட்சுமி என்றும் கூறுவார்கள். ஆக மொத்தம் பெண்கள் மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறார்கள். பெண்கள் எந்த அளவிற்கு ஒரு வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு மகாலட்சுமி தாயாரின் அருளும் அந்த வீட்டில் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் செய்யக்கூடிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளம் பெருக பெண்கள் செய்ய வேண்டிய பூஜை

இந்த பூஜையை பெண்கள் தான் செய்ய வேண்டுமா? ஆண்கள் செய்யக்கூடாதா? என்ற கேள்வி எழும். பெண்கள் செய்தால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும். ஆண்களும் செய்யலாம். அதில் எந்தவித தவறும் இல்லை. இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி தங்கள் கையில் மருதாணியை வைத்துக் கொள்ள வேண்டும். மருதாணி கிடைக்காத பட்சத்தில் விட்டு விடுங்கள். முடிந்த அளவிற்கு மருதாணி வைத்துக்கொண்டு செய்தால் அந்த பூஜை விரைவிலேயே முழு பலனையும் கொடுக்கும்.

- Advertisement -

இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். இயன்றவர்கள் தினமும் கூட செய்யலாம். எப்பொழுதும் போல் உங்கள் வீட்டை சுத்தம் செய்து வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு மலர்களை சாற்றி அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு விளக்கேற்றி வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி விட வேண்டும்.

அடுத்ததாக மஞ்சளை உங்களுடைய உள்ளங்கையில் கொட்டி கெட்டியாக பிணைந்து கொள்ள வேண்டும். பிள்ளையார் பிடிப்பதற்கு எந்த அளவிற்கு நாம் கெட்டியாக பினைவோமோ அந்த அளவுக்கு கெட்டியாக பிணைந்து அதை அப்படியே உங்களுடைய உள்ளங்கையில் வடை போல தட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்கு மேல் தங்கு நாணயம், வெள்ளி நாணயம் இவற்றை வைக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லை என்பவர்கள் சாதாரண ஒரு ரூபாய் நாணயத்தை கூட வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த நாணயத்தை மஞ்சளுக்கு நடுவே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்களுடைய உள்ளங்கையை பார்த்தவர் அதாவது உங்களுடைய உள்ளங்கையில் இருக்கக்கூடிய மஞ்சள் மற்றும் நாணயத்தை பார்த்தவாறு மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூற வேண்டும். இயலாதவர்கள் ஓம் மகாலட்சுமி தாயே போற்றி என்ற எளிமையான மந்திரத்தை கூட 108 முறை கூறலாம். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 108 முறை கூறி முடித்துவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து உங்களுடைய பர்ஸிலோ, பணம் வைக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும். அந்த மஞ்சளை முகத்திலும் கைகளிலும் தேய்த்து பெண்கள் குளித்து விடலாம். அப்படி மஞ்சள் தேய்த்து குளிக்கும் பழக்கம் இல்லை என்பவர்கள் தினமும் இந்த மஞ்சளை எடுத்து நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களும் இந்த மஞ்சளை எடுத்து தங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக பௌர்ணமி தினத்தன்று வாங்க வேண்டிய பொருட்கள்

இப்படி முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்தால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருளானது பரிபூரணமாக கிடைத்து செல்வ வளம் அதிகரிக்கும் என்னும் தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -