செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு

perumal vazhipadu
- Advertisement -

நம்முடைய வழிபாட்டு முறைகளில் ஒவ்வொரு தெய்வங்களுக்கென ஒவ்வொரு நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்தந்த தினங்களில் அவர்களை வணங்கும் போது அதற்கான பலனை முழுமையாக பெற முடியும். அப்படித் தான் நம்முடைய வழிபாடு முறையும் அமைந்திருக்கிறது. நாமும் இதுவரையில் அப்படி தான் வழிபட்டு வருகிறோம்.

அடுத்ததாக அந்தந்த தெய்வங்களை அவர்களுக்கான திதிகளில் வணங்குவது மேலும் நல்ல பலனை தருவதாக அமையும். நாளை மாசி மாதம் செவ்வாய்க்கிழமையுடன் வந்திருக்கும் ஏகாதசியில் திதியில் பெருமாளை வணங்கினால் நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருகும். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நான் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு

பெருமாள் என்றாலே செல்வம் தான் இதற்கு மாற்று கருத்தை கிடையாது. அலங்கார பிரியரான பெருமாள் எப்பொழுதும் செல்வ செழிப்பிலே திகழ்பவர். அவரை மனதார ஒரு கணம் நினைத்து வேண்டினாலே போதும் செல்வ வளங்களை நமக்கு வாரி இறைப்பார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வழிபாட்டையும் கூட அவருக்கு பிடித்தமான பொருள் கொண்டு செய்யும் போது இன்னும் பலனை தரக்கூடியதாக அமையும்.

அப்படி ஒரு வழிபாட்டை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம் இந்த வழிபாட்டை நாளைய தினம் செவ்வாய்க் கிழமையுடன் வந்திருக்கும் ஏகாதசி திதியில் செய்ய வேண்டும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து பூஜையறையில் முதலில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

பெருமாள் படத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பொட்டு வைத்து நல்ல வாசம் மிக்க மலர்களால் அலங்காரம் செய்யுங்கள். பெருமாளுக்கு எவ்வளவு அலங்காரம் செய்கிறமோ அவ்வளவு மனம் மகிழ்வார். பெருமாள் படம் இல்லையெனில் மகாலட்சுமி தாயார் படத்திற்கும் செய்யுங்கள்.

அதன் பிறகு பெருமாளுக்கு நெய்வேத்தியமாக ஏதேனும் ஒரு இனிப்பை செய்து வையுங்கள். பால் பாயாசம் போன்றவை செய்தால் சிறப்பு. இப்போது பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு விடுங்கள். இந்த மாலை அலங்காரத்துடன் பெருமாள் படத்திற்கு துளசியால் மாலை கட்டி போடுவது மிகவும் விசேஷம்.

- Advertisement -

பெருமாளுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டு வைத்து அதில்ஏலக்காயும் பச்சைக் கற்பூரத்தையும் வைத்து விடுங்கள். அதே போல் கொஞ்சம் துளசி இலைகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பெருமாள் படத்திற்கு முன்பாக அமர்ந்து அவரை மனதார நினைத்து உங்களுடைய பண தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் செல்வ வளம் பெருகி மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்று மனதார நினைத்துக் கொண்டு பெருமாளை வழிபட வேண்டும். அப்போது அவருடைய நாமங்கள் பாசுரம் என எது உங்களுக்கு தெரிகிறதோ அதை சொல்லுங்கள். ஒரு வேளை எதுவும் தெரியாத பட்சத்தில் ஓம் நமோ நாராயணா என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி துளசியால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

இந்த பூஜையை காலை நேரத்தில் செய்த பிறகு மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அவரை வழிபட்டு வாருங்கள் காலையில் செய்ய முடியவில்லை என்ற மாலையில் வழிபாடும் கோவில் தரிசனமும் செய்யலாம் தவறில்லை.

மறுநாள் காலை புதன்கிழமை அன்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்த துளசி பெருமாள் முன்பு வைத்த ஏலக்காய் பச்சை கற்பூரம் அனைத்தையும் ஒரு மூட்டையாக கட்டி பீரோவில் வைத்து விடுங்கள். இது அடுத்த ஏகாதசி திதி வரை அப்படியே இருக்கும் அடுத்த மாதமும் இதே போல இந்த வழிபாடை தொடர்ந்து செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: திருமணத்தடை நீங்க மருதாணி பரிகாரம்

இதுபோல மாதந்தோறும் வரும் ஏகாதசி திதியில் பெருமாளை நினைத்து வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத செல்வ வளத்தை எட்டலாம். இந்த வழிபாடு முறையில் நம்பிக்கை இருந்து நம்பிக்கையுடன் பெருமாளை வழிபட்டு பலன் அடையுங்கள்.

- Advertisement -