சகலத்தையும் தரும் சங்கு வழிபாடு

sangu sivan
- Advertisement -

ஒரு மனிதன் வீடு வாசல் மனை சொத்து என்று சகல சௌபாக்கியத்துடன் வாழ்வதே இன்பமான வாழ்க்கை. இவையெல்லாம் இல்லாமல் வாழவே முடியாதா? என்றால் இருப்பதை வைத்துக் கொண்டு எளிமையான வாழ்க்கை வாழ்வது ஒரு வகை. ஆனாலும் அதற்கும் வீடு வாசல் மனை வேண்டும்.

பணம் இல்லாமல் வாழவே முடியாதா? என்றால் அதுவும் முடியாத காரியம் தான்.வாழ்க்கை நிம்மதியாக அமைய வேண்டும் என்றால் இவையெல்லாம் குறைந்தபட்ச அளவிலாவது நம்மிடம் இருக்க வேண்டும். இவை இல்லாது போனால் தினம் அல்லல் படும் ஒரு துன்பமான வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

அத்தகைய வாழ்க்கை வாழ நாம் செய்யும் முயற்சி உழைப்புடன் சேர்த்து இந்த ஒரு வழிப்பாடும் பெரிதளவு உறுதுணையாக இருக்கும். அது என்ன என்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்வை உயர்த்தும் சங்கு வழிபாடு

சங்கை பொருத்த வரையில் இரண்டு வகை உண்டு ஒன்று வலம்புரி சங்கு மற்றொன்று இடம்புரி சங்கு இதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதை தவிர்த்து, பூஜை சங்கும் உள்ளது. அது சிறிய அளவில் பூஜை அறையில் வைப்பதற்காக பயன் படுத்துவர்கள். இவற்றில் உங்களுக்கு எதை கிடைத்தாலும் அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சங்கை பொறுத்த வரையில் பெருமாளுக்கு உரியதாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த சங்கை கையில் வைத்துக் கொண்டு நாம் எந்த தெய்வத்தை நினைத்து வணங்கினாலும் அவர்களின் அருள் கிடைக்கும் என்பது பலரும் அரியாத விஷயம். அதே போல் சங்கை கையில் வைத்துக் கொண்டு நாம் வேண்டுவது எதுவாயினும் அது நடக்கக் கூடிய யோகத்தை தரும் என்றும் சொல்லப்படுகிறது.

அப்படியான இந்த சங்கை வைத்து தான் நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை பெற வழிபாடு செய்யப் போகிறோம். இந்த வழிபாடு காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது சிறந்தது. காலையில் குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த வலம்புரி சங்கில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலை அல்லது வில்வ இலை எது கிடைத்தாலும் போடலாம்.

- Advertisement -

இப்போது இந்த சங்கை உங்கள் வலது கையில் வைத்துக் கொண்டு இடது கையை சங்கில் மேல் புறம் வைத்து மூடி விடுங்கள். கண்களை மூடி உங்கள் வேண்டுதலை கருத்தில் நிறுத்தி ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் சொல்லுங்கள். இந்த மந்திரத்தை குறைந்தது 108 முறை சொல்ல வேண்டும். அதிகபட்சமாக எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம்.

இப்படி சொல்லிய பிறகு இந்த தீர்த்தத்தை உங்கள் வீடு முழுவதும் தெளித்து கொள்ளுங்கள். உங்கள் மீதும் தெளித்து கொள்ளுங்கள். இது வீட்டிற்கு தெய்வீக தன்மை ஏற்படுத்துவதுடன் உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை உருவாக்கி உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்.

இந்த தண்ணீரை தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபார ஸ்தலங்களிலும் தெளிக்கலாம் தவறில்லை. இதன் மூலம் வியாபாரம் திருப்தியாகி நல்ல லாபம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சனிக்கிழமை வாங்க கூடாத பொருள்

இந்த வழிபாடை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து தடைகளையும் நீக்கி சகல விதமான செல்வங்களையும் அள்ளித் தரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -