செல்வத்தை ஈர்க்கும் உணவுப் பொருட்கள்

selvam food
- Advertisement -

செல்வ செழிப்பை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் கடினமாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைக்க வேண்டும் என்றால் முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். ஆக மொத்தம் செல்வத்தை சேர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்பதுதான் அடிப்படையான விஷயமாக திகழ்கிறது. அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உண்ணும் பொழுது சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களை அதில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நவகிரகங்களின் அருளாலும் நம்மால் அதிகளவு பணத்தை சம்பாதிக்க முடியும். அந்த உணவுப் பொருட்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவகிரகங்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் தான் ஒருவருடைய வாழ்க்கை நடக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு நவகிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. அந்த கிரகத்தை நமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்றால் அந்த கிரகத்திற்குரிய அதி தேவதையை அந்த கிரகத்திற்குரிய தானியத்தை வைத்து வழிபடுவதன் மூலம் அந்த கிரகத்தின் அனுக்கிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இப்படி வழிப்பாட்டை நாம் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் அன்றாடம் நாம் உணவு உண்ணும் பொழுது அந்த கிரகங்களின் ஆதிக்கம் பொருந்திய உணவுப் பொருட்களையும் நாம் உண்பதன் மூலம் அந்த கிரகங்களின் அருளை நம்மால் பெற முடியும் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக நமக்கு செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் குரு பகவான் மற்றும் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக அன்றாடம் நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான வருமானத்தை பெறவும், சுகபோகமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றாலும் நமக்கு சுக்கிர பகவானின் அருள் என்பது கண்டிப்பாக வேண்டும்.

குரு பகவான் என்பவர் பெரும் பணத்திற்கு சொந்தக்காரர் என்பதால் நம்முடைய அடிப்படை தேவைகளை முதலில் நாம் பூர்த்தி செய்து கொண்டால் தான் பிறகு பெரும்பணத்திற்காக ஆசைப்பட வேண்டும். அதனால் முதலில் சுக்கிர பகவானின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும். சுக்ர பகவான் வேறு எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்தால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்ற சூட்சுமங்களும் இருக்கிறது.

- Advertisement -

சுக்கிர பகவான் கேதுவுடன் சேரும்பொழுதும், சுக்கிர பகவான் சனி பகவானுடன் சேரும்பொழுதும் நமக்கு செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் இவர்களின் அம்சம் பொருந்திய பொருட்களை அன்றாடம் நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும். கேது மற்றும் சுக்கிர பகவானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் உளுந்த வடையுடன் வெண்ணையை தொட்டு சாப்பிட வேண்டும். உளுந்த வடை என்பது கேது பகவானுக்குரிய உணவுப் பொருளாகவும் வெண்ணெய் என்பது சுக்கிர பகவானுக்குரிய உணவுப் பொருளாகும் திகழ்வதால் இந்த இரண்டு உணவுப் பொருட்களையும் நாம் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பொழுது இவர்கள் இருவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதே போல் சுக்கிர பகவானுக்குரிய அதி தேவதையான மகாலட்சுமி தாயாருக்கு விருப்பமான ஒரு பொருளாக திகழ்வதுதான் நெல்லிக்கனி. அதே சமயம் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடிய குபேர பகவானுக்குரிய பொருளாக திகழ்வதுதான் ஊறுகாய். அதனால் தினமும் நெல்லிக்கனி ஊறுகாயை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மகாலட்சுமி மற்றும் குபேரரின் அருளை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

அடுத்ததாக சனிபகவான் மற்றும் சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு தினமும் எள்ளுருண்டை நாம் சாப்பிட வேண்டும். எள்ளு சனிபகவானுக்குரிய தானியமாகவும் அதில் சேர்க்கப்படும் இனிப்பானது சுக்கிர பகவானாகவும் திகழ்வதால் எள்ளுருண்டை நாம் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம் சனி சுக்கிர சேர்க்கை உண்டாகி அதனால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: குழந்தை நன்றாக படிக்க வழிபாடு

இந்த சூட்சமமான வழிமுறைகளை நாமும் பின்பற்றி நம் வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரித்துக் கொள்வோம்

- Advertisement -