ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்க இதை செய்யுங்கள்

sevvai
- Advertisement -

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் தங்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. இப்படி திருமணம் செய்யும் போது ஜோதிட ரீதியில் பலவகை பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. அதில் செவ்வாய் கிரகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகம் பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகம் பாதகமான நிலையில் இருந்தால் திருமண வாழ்வில் பல சிக்கல்கள் உருவாகும். அதே போல் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இந்த செவ்வாய் கிரகம் தடை ஏற்படுத்தக்கூடும். இதற்கான பரிகாரம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

sevvai

செவ்வாய் கிரகம் ஒரு மனிதனுக்கு உடன் பிறக்கும் சகோதர, சகோதரிகளுக்கு காரகத்துவம் வகிக்கிறார். எனவே ஒரு நபரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் காரணமாக குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலை ஏற்படுமானால் அந்த ஜாதகர் சென்ற பிறவியில் தன் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை துன்புறுத்தியதாலும், அவர்களுக்கு உரிய சொத்து பங்கை தராமல் அவர்களின் சாபத்தை பெற்றதாலும் இப்பிறவியில் குழந்தை பாக்கியம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் தங்களின் ஜாதகத்தை கொடுத்து தங்களுக்கு செவ்வாய் கிரகம் காரணமாக புத்திர பாக்கியம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டு. கீழ்கண்ட பரிகாரத்தை செய்து செவ்வாய் கிரக தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் பெறலாம்.

- Advertisement -

100 கிராம் தரமான துவரம் பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துவரம் பருப்புகளை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் நிற காடா துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக துவரம் பருப்புகளை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும். அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து கொண்டு உறங்க வேண்டும்.

thuvaram-paruppu

மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, செவ்வாய் பகவானை மனதில் நினைத்து செவ்வாய் பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும்.

- Advertisement -

Baby

இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும். இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது துவரம் பருப்புகள் முடிந்த துணி பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காத போது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் செவ்வாய் புத்திர தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு புத்திர தோஷம் நீங்கி மனைவி வயிற்றில் கரு உருவாக செவ்வாய் பகவான் அருள் புரிவார்.

இதையும் படிக்கலாமே:
துஷ்ட சக்திகளின் தொல்லை நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sevvai putra dosha pariharam in Tamil. It is also called as Sevvai graha dosha in Tamil or Kulanthai bakkiyam pera in Tamil or Putra dosham neenga in Tamil or Sevvai graham in Tamil.

- Advertisement -