அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டும் தான் இந்த செடியை வீட்டில் வைத்து வளர்க்க முடியும். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் பூஜைக்கு இந்த பூ கிடைக்கும்.

flowers
- Advertisement -

நல்ல நேரம் வரப்போகுது என்றாலே, அந்த நல்ல நேரத்தை நமக்கு உணர்த்தும் வகையில் சில நல்ல விஷயங்கள் நம்முடைய வாழ்க்கையில் நடக்க தொடங்கும். அந்த வரிசையில் இந்த செடியோ அல்லது இந்த பூவோ உங்கள் கைக்கு கிடைக்கப் போகிறது என்றால், அல்லது இந்த பூ உங்கள் கைக்கு கிடைத்து விட்டது என்றாலும் உங்களுக்கு எதிர்பாராத யோகம் வரப்போகிறது என்று அர்த்தம். வெறும் யோகம் இல்லைங்க, சுக்கிர யோகம் அடிக்க போகிறது என்று அர்த்தம். சுக்கிரன் யோகத்தை அள்ளி கொடுக்கக்கூடிய, அதிர்ஷ்டத்தை கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டிக் கொடுக்கக்கூடிய ஒரு பூ என்றால், அது செண்பகப்பூ. அதிர்ஷ்டத்தை தரக்கூடிய செடி என்றால் அது செண்பகப் பூ செடி.

flowers2

செண்பகப் பூ செடியினை நம் வீட்டில் வைத்து வளர்த்தோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்டம் இருந்தால் தான் அந்த செடி நம்முடைய வீட்டில் செழிப்பாக வளரும் என்றும் சொல்லலாம். இப்படியாக நம்முடைய வீட்டில் வளரக்கூடிய அந்த செண்பகப்பூ செடியிலிருந்து செண்பகப் பூவைப் பறித்து நம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு வைத்து பூஜை செய்தால் மிகவும் நல்லது. தினம்தோறும் செண்பகப் பூவை மகாலட்சுமிக்கு சூட்டுவதால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகற்றப்படும்.

- Advertisement -

செண்பகப் பூ வானது சுக்கிரனுக்கு மிகமிக விருப்பமான பூ என்றும் சொல்லப்பட்டுள்ளது. சுக்கிர பகவானை நினைத்து மகாலட்சுமிக்கு இந்த பூவை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில், மகாலட்சுமியை நினைத்து சுக்கிர பகவானை நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டில் செண்பகப் பூ செடி இல்லாதவர்கள் கடையில் சொல்லி வைத்து வியாழக்கிழமை அன்று இந்த பூவை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், இந்தப் பூவை பூஜை அறையில் வைத்து, நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

- Advertisement -

செண்பக பூவிற்கு கொஞ்சம் விலை அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும் இந்தப் பூவை வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு பயன்படுத்தி பாருங்கள். முடிந்தால் செண்பகப் பூச்செடியை உங்களுடைய வீட்டில் நட்டு வைத்து வளர்த்து வாருங்கள்.

பூஜையில் வைத்த செண்பகப்பூ காய்ந்ததும் அந்த பூவை பூஜை பொருட்கள் போடும் குப்பையோடு சேர்த்து விடுங்கள். அவ்வளவு தான். எதிர்காலத்தில் உங்களுக்கு வரக்கூடிய அதிர்ஷ்டமான வாழ்க்கையை உணர்த்தும் வகையில் இந்தப் பூ உங்கள் கைக்கு கிடைத்தால், அதை பூஜைக்கு பயன்படுத்த தவறி விடாதீர்கள். உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே தவறவிடுவதாக அர்த்தம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு நல்ல பலனை பெற வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -