எவ்வளவு பெரிய சிக்கலான கடன் பிரச்சனைக்கும் சில நாட்களிலேயே தீர்வு கிடைக்க 6 வெற்றிலைகள் போதும்.

vetrilai-cash
- Advertisement -

சில சமயங்களில் நம்மை அறியாமலேயே நாம் சில பணப் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வோம். அவசரமாக நமக்கு பணம் தேவைப்படும். அப்படி இல்லை என்றால், யாருக்காவது பணம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம். அது இ.எம்.ஐ பிரச்சனையாக இருந்தாலும் சரி, வாடகை பிரச்சனையாக இருந்தாலும் சரி, கடன் பிரச்சினையாக இருந்தாலும் சரி, ஆகமொத்தத்தில் நமக்கு பண சிக்கல் உள்ளது. அந்த சிக்கலுக்கான தீர்வு உடனடியாக கிடைக்க வேண்டும். என்ன செய்வது. முதலில் பணத்தை எப்படிப் புரட்டுவது என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். கூடவே இந்த தாந்திரீக ரீதியான பரிகாரத்தையும் ஒரு பக்கம் செய்து பாருங்கள். நிச்சயமாக பண சிக்கல் சீக்கிரமே தீரும்.

vetrilai

பண சிக்கல் தீருவதற்கு நமக்கு சுக்கிர பகவானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும். சுக்கிரனின் எண் 6. வெற்றியை கொடுக்க கூடிய பொருள் என்றால் அது வெற்றிலை. வெற்றிலையை வைத்து செய்த வழிபாடு எதுவும் தோற்றுப் போனதாக சரித்திரம் இல்லை. எடுத்துக்காட்டிற்கு நிச்சயதார்த்தம் என்றால் தாம்பூல மாற்றுவது, வெற்றிலை பாக்கு மாற்றுவது, ஒரு ஜாதகம் பார்க்க செல்வதாக இருந்தால் கூட வெற்றிலைபாக்கு இல்லாமல் செல்லக்கூடாது. வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்வதாக இருந்தால் வெற்றிலை பாக்கு இல்லாமல் செய்யும் வழக்கம் கிடையாது. இப்படி வெற்றியை தருவதற்கு வெற்றிலைக்கு முதல் இடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

- Advertisement -

இதையெல்லாம் தாண்டி அனுமனுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமென்று சீதாதேவி ஹனுமனின் தலை மீது வெற்றிலையை வைத்து ஆசீர்வாதம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இத்தனை சிறப்பு அம்சங்களையும் கொண்ட வெற்றிலைகளை இந்த பரிகாரத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்.

சுத்தமான கிழிசல் இல்லாத 6 வெற்றிலைகளை வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டு கொட்டைப் பாக்கு, அதன் மேலே ஒரு ரூபாய் நாணயம். இதை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் பணம் வைப்பீர்களோ பீரோ கல்லாப்பெட்டி எதுவாக இருந்தாலும் அந்த இடத்தில் ரோஸ் கலரில் துணியை விரித்து கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பிங்க் என்று சொல்லுவார்கள்.

- Advertisement -

இன்னும் புரியும்படி சொல்லப்போனால் முன்பெல்லாம் நகைகளை வைத்து பிங்க் நிற பேப்பரில் மடித்து தருவார்கள். அந்த பிங்க் வண்ணத்தில் துணையாக கிடைத்தாலும் சரிதான். அல்லது பிங்க் நிறத்தில் நகைகளை மடித்துத் தரும் காகிதம் கிடைத்தாலும் பெரிய அளவில் அதை வாங்கிக் கொள்ளுங்கள்.

pick-paper

இந்த பிங்க் நிற துணியை பணம் வைக்கும் இடத்தில் விரித்து விட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் வெற்றிலை பாக்கு ஒரு ரூபாயை, துணியின் மேல் பணப்பெட்டியில் வைத்துவிடுங்கள். மனதார குலதெய்வத்தையும் சுக்கிர பகவானையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பணம் அந்த பணப்பெட்டியில் வந்து சேரவேண்டும் என்று. பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, அந்த வெற்றிலை பாக்கை வாட விடக்கூடாது.

vetrilai

வெற்றிலை பாக்கு வாடுவதற்கு முன்பாகவே அதை தானமாக வயதானவர்களுக்கு கொடுத்துவிடலாம். அந்த வெற்றிலை பாக்கை வீட்டில் இருப்பவர்கள் போடுவதாக இருந்தால் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். எதுவுமே இல்லை என்றால் ஆடு மாடுகளுக்காக்கு வெற்றிலையை வாடுவதற்கு முன்பு சாப்பிட கொடுத்து விடுங்கள்.

cash

இப்படி எத்தனை நாட்கள் செய்ய வேண்டும். உங்களுடைய அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் வரை செய்ய வேண்டும். தினமும் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய 3 நாட்களிலிருந்து, 11 நாட்களுக்குள் நிச்சயமாக உங்களுடைய தேவை பூர்த்தியாக ஏதாவது ஒருவகையில் வழி கிடைக்கும். சிக்கல்கள் சீக்கிரமே தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த சுலபமான பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -