வீட்டில் சமையல் வேலையை சுலபமாகவும், ஈஸியாகவும் செய்திட இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் போதும்

- Advertisement -

பெண்களுக்கு சமையல் வேலை என்பது ஒரு நாளில் அவர்களுக்கு இருக்கின்ற மிகப் பெரும் வேலையாகும். ஒரு சில நேரங்களில் எப்படியாவது இந்த வேலையை சீக்கிரமாக முடித்தால் போதும் என்று இருக்கும். அவ்வாறு குழந்தைகள் இருக்கின்ற வீடுகளிலும், வேலைக்கு செல்லும்பெண்களளின் வீடுகளிலும் வேலையை ஈசியாக முடிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் முன்கூட்டியே சில தயாரிப்புகளை செய்து வைத்துக்கொண்டால் போதும். வேலைகளை எளிதாக முடித்து விட முடியும் அவ்வாறு நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன விஷயங்களைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

surakkai kulambu

குறிப்பு: 1
காலையில் அவசர அவசரமாக சமைக்க ஆரம்பிக்கும் பொழுது அது எந்த உணவாக இருந்தாலும் அதற்கு முக்கியமாக தேவைப்படுவது வெங்காயம். வெங்காயத்தைத் தோல் உரிப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும். எனவே வீட்டில் நமக்கு இருக்கின்ற நேரத்தில் இந்த வெங்காயங்களை தோலுரித்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 2
சமையலில் அதிகமாக பயன்படுத்தும் இஞ்சி பூண்டு விழுது சீக்கிரத்தில் வீணாகாமல் இருக்க இஞ்சி பூண்டு விழுததை அரைக்கும் பொழுது அதனுடன் அரை ஸ்பூன் எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் இஞ்சி பூண்டு விழுது அதிக நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

ginger-garlic-paste2

குறிப்பு: 3
தினமும் டீ, காபி போடுவதற்கு பால் வாங்குவது அனைவர் வீட்டிலும் வழக்கமாக இருக்கும். இதில் இருந்து இரண்டு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து அப்படியே ஒரு நாள் முழுவதும் வெளியில் வைத்து விட வேண்டும். பிறகு அவை தயிராக மாறி விடும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்து வைத்துக்கொண்டால் அவசரத்திற்கு மோர்க்குழம்பு செய்து கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு: 4
அவ்வாறு இட்லி, தோசைக்கு அடிக்கடி சட்னி அரைக்க அல்லது குருமா குழம்பு வைக்க தேங்காய் தேவைப்படும். இந்த தேங்காயை அவசரத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னதாகவே தேங்காயை துருவி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் போதும். தேவைப்படும் நேரத்தில் எளிதில் உபயோகித்துக் கொள்ளலாம்.

coconut2

குறிப்பு: 5
அதுபோல உணவுகளில் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் பூண்டையும் நமக்கு கிடைக்கும் நேரத்தில் தோல் உரித்து வைத்து, அவற்றையும் ஒரு கிளாஸ் பாட்டிலில் டிஷ்யு பேப்பர் வைத்து அதில் தோலுரித்த பூண்டடை போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் போதும். ஒரு வாரத்திற்கு மேல் நன்றாக இருக்கும்.

குறிப்பு: 6
அவ்வாறு கடைகளில் காய்கறி வாங்கும் பொழுது இலவசமாக கொடுக்கும் கருவேப்பிலை வீணாகாமல் இருக்க அவற்றை உருவி அலசி காய வைத்து, ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைத்து கொள்ளுங்கள். இவை அதிக நாட்களுக்கு நன்றாக இருக்கும்.

கருவேப்பிலை

குறிப்பு: 7
சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலா பொடி போன்ற பொடி வகைகளை அரைத்து வைத்துக்கொண்டால் நாம் சமைக்கும் பொழுது இவற்றை பயன்படுத்தி சமையல் வேலையை எளிதாக முடித்து விட முடியும்.

- Advertisement -