எப்பொழுதும் உங்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உங்கள் நாத்தனார் உங்கள் மீது பாசமாக இருக்க இந்த அத்தி செடி மட்டும் உங்கள் வீட்டில் இருந்தால் போதும்

aththi
- Advertisement -

திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் பெண்கள் அந்த குடும்பத்தில் உள்ள அனைவரையும் நேசிப்பவளாக இருக்க வேண்டும். இதனை அனைத்து பெண்களுக்கும் அவர்களது பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வீட்டில் உள்ள நபர்கள் புதியதாக திருமணமாகி தனது வீட்டிற்கு வருகின்ற பெண்ணை தனது மகள் போல, தனது தங்கை போல, தனது தோழி போல பார்த்துக் கொள்வார்களா என்பது ஒரு சிலரின் மனத்தை பொறுத்துதான் அமைகிறது. அப்படி ஒரு சில குடும்பங்களில் மாமியார் மருமகள் பிரச்சனை, மாமியார் நாத்தனார் பிரச்சனை என்று பலவித சண்டைகள் தோன்றுகின்றன. இந்தப் பதிவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நாத்தனார் உங்களுடன் சுமூக உறவுடன் இருக்க அத்திசசெடி பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றிதான் தெரிந்துகொள்ள போகின்றோம்.

திருமணமாகி புதிய வீட்டிற்கு செல்லும் பெண்கள் அங்கு தனது கணவரின் அக்கா, தங்கை இருவரில் எவரேனும் அந்த வீட்டில் இருந்தால் அவர்களுடன் நெருங்கி பழகுவதில் சில சங்கடங்கள் ஏற்படும். ஒரு சிலர் வீட்டிற்கு வந்த பெண்ணை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் தனக்கு போட்டியாக இந்த வீட்டிற்கு இன்னொரு பெண் வந்துவிட்டாள் என நினைத்து அவர்களை பார்த்து பொறாமை கொள்கின்றனர்.

- Advertisement -

இப்படி சிறிதளவில் பொறாமை எண்ணம் தோன்றி அது நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே அதிக அளவு பிரிவினை உண்டாக்குகின்றது. இருவரும் சண்டை போட்டுக் கொள்ள ஏதேனும் சிறிய காரணம் கிடைத்தாலும் அதனை பெரிய சண்டையாக மாற்றிவிடுவார்கள். அவ்வாறு புதியதாக வீட்டிற்கு வந்த அந்த புது பெண் எவ்வளவோ சூழ்நிலையை சமாளிக்க முயற்சித்தாலும் சில சமயங்களில் பிரச்சினை என்பது இருந்துகொண்டேதான் இருக்கும்.

இப்படிப்பட்ட வீடுகளில் இந்த பிரச்சனையை சுமூகமாக சமாளிக்க முந்தைய காலத்தில் எல்லாம் ஒரு ஆன்மீக பரிகாரத்தை பின்பற்றி வந்திருந்தனர். பெண்களுக்கு இயல்பாகவே மற்றொரு பெண்ணை பார்க்கும் பொழுது சிறிதளவு பொறாமை எண்ணம் தோன்றுவது இயல்பான விஷயம் தான். அப்படி இதனை சரிசெய்ய வீட்டில் ஒரு அத்தி செடியை வளர்க்க வேண்டும்.

- Advertisement -

இந்த அத்தி செடிக்கு தனது நாத்தனாரின் பெயரை வைத்து மனதிற்குள்ளேயே அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதில் காய், பழம் வரத் தொடங்கியதும் அந்த பழத்தை தனது கைகளால் நாத்தனாருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்கும் இடையேயான உறவு பாசமுள்ள உறவாக மாறுகிறது. இதனை நமது முன்னோர்கள் மிகவும் நம்பிக்கையுடன் பின்பற்றி உள்ளனர்.

இதனை நிரூபிக்கும் வகையில் தொன்றுதொட்ட பழமொழி ஒன்று இருக்கிறது. நாத்திக்கு தீ வை என்பதே அந்த பழமொழியாகும். இதில் நாத்தி என்பது நாத்தனாராகவும், தீ என்பது அத்தியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கூறப்பட்டுள்ள படி அத்தி செடியில் வளரக் கூடிய பழம் அல்லது காயை நாத்தனாருக்கு சாப்பிட கொடுக்கும் பொழுது அவர்களின் உறவு பலப்படுகிறது.

- Advertisement -