சிவ சிவ! தூங்கி எழுந்தவுடன் உங்கள் தலை மேல் இருக்கும் எல்லா பிரச்சனையும் சரியாக வேண்டுமா? தூங்கும் போது தலைக்கு மேலே இதை மட்டும் வைத்து தூங்குங்க போதும்.

shivan1
- Advertisement -

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள், ஏழையாக இருப்பவர்கள், ரொம்பவும் பணக்காரர்களாக இருப்பவர்கள் இப்படி எல்லாருமே இந்த விஷயத்தை யோசிப்பது உண்டு. தூங்கி காலையில் எந்திரிக்கும்போது நமக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் சரியாகி விட்டால் எவ்வளவு நல்லா இருக்கும். தூங்கி எந்திருக்கும் போது இப்போதுதான் பிறந்த குழந்தை போல மனது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அடுத்தவர்கள் மீது இருக்கும் கோபம் பொறாமை இது எல்லாம் இருக்கக் கூடாது. எதிரிகள் இருக்கக் கூடாது. பண பிரச்சினை இருக்கக் கூடாது. இப்படி எல்லா பிரச்சனைகளும் சரியாக ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கிறதா என்று நினைக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை. அடுத்தவர்களுக்கு நாம் நல்லது நினைத்தால், நமக்கும் நல்லதே நடக்கும். இந்த தாரக மந்திரத்தை நினைவில் வைத்துக் கொண்டு இந்த பரிகாரத்திற்குள் செல்வோம்.

நிம்மதி பிறக்க இரவு தூங்கும் போது தலைக்கு மேல் வைக்க வேண்டிய பொருள்:
ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிரம்ப தண்ணீரை ஊற்றி விடுங்கள். வலது கை ஆள்காட்டி விரலால் அதில் சிவ சிவ என்று எழுத வேண்டும். தண்ணீரில் எப்படி எழுத முடியும் என்று கேட்காதீங்க. சும்மா தண்ணீரில் கை வைத்து சிவ சிவ என்று ஒரு எழுத்துக்கு மேல் இன்னொரு எழுத்து எழுதலாம் தப்பு கிடையாது. அந்த சிவ சிவ மந்திரத்தின் சக்தி அந்த தண்ணீரில் இறங்க வேண்டும்.

- Advertisement -

இரவு படுத்து தூங்க போறீங்க. உங்களுடைய தலைக்கு மேல் பக்கம் இந்த டம்ளர் தண்ணீரை வைத்து விட வேண்டும். கை பட்டு கீழே கொட்ட வேண்டாம். அப்படி கீழே கொட்டாதபடி கொஞ்சம் இடைவெளி விட்டு கூட தலைக்கு மேலே இந்த தண்ணீரை வைத்துவிட்டு, இரவு தூங்கி விடுங்கள். சிவபெருமானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கஷ்டம் எல்லாம் இன்றோடு முடியட்டும் என்று. மறுநாள் காலை எந்திரிக்கும்போது உங்களுடைய மனது அப்படியே ரொம்ப ரொம்ப அமைதியாக இருக்கும்.

தன் மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் ஏதோ ஒரு இடத்தில் இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு ஏற்படும். இது என்ன மேஜிக்கா. ஆமாங்க சிவ மந்திரத்தின் மேஜிக் தான் இது. உங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் அந்த தண்ணீர் ஈர்த்துக் கொண்டிருக்கும். அந்தத் தண்ணீரை காலையில் எழுந்து முதல் வேலையாக கொண்டு போய் வீட்டிற்கு வெளியில் எங்காவது ஒரு இடத்தில் கொட்டி விடுங்கள்.

- Advertisement -

சிங்கிள் ஊத்தாதீங்க. வீட்டிற்கு வெளிப்பக்கம் ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் ஊற்றி விடுங்கள். செடி கொடிகளுக்கும் கட்டாயம் இந்த தண்ணீரை ஊற்றக்கூடாது. இது நெகட்டிவ் எனர்ஜி நிறைந்த தண்ணீர். மண்ணில் தான் ஊற்ற வேண்டும். அல்லது உங்க வீட்டுக்கு வெளி பக்கத்தில் தரை இருந்தால் கூட பரவாயில்லை அங்கு கொட்டி விட்டால் அது காய்ந்து விடும்.

தினமும் இதை செய்ய வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. ரொம்பவும் மனசு கஷ்டப்பட்டு இருக்கீங்க. படுத்தவுடன் தூக்கம் வரல. அந்த ஒரு பிரச்சனை என்னை ரொம்பவும் குழப்பிக் கொண்டே இருக்கிறது என்ற ஒரு சூழ்நிலை கட்டாயம் மனிதர்களுக்கு வரும். அப்போது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அந்த பிரச்சினையில் இருந்து உடனடியாக விடுபடக்கூடிய சூழல் உங்களுக்கு ஏற்பட்டுவிடும். நிஜமாவே அந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை அந்த ஆண்டவன் காண்பித்துக் கொடுப்பான் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த பரிகாரத்தை செய்து பலன் பெரலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -