சிவன் பார்வதி அருள் கிடைக்க 1 வரி மந்திரம்

sivan12
- Advertisement -

சில வீடுகளில் எல்லாம் கஷ்டங்கள் தொடர்கதையாக இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் அந்த கஷ்டத்தில் இருந்து தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற பெரிய அளவில் போராட்டமே நடத்தி வருவார்கள். ஆனால் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்பேச்சு கேட்காமல், அவர்கள் இஷ்டத்திற்கு குறுக்கு வழியில் செல்வார்கள்.

குடும்பத்தில் சூனியம் பிடிப்பது போல ஒரு சூழ்நிலை இருக்கும். வீட்டில் இருக்கும் வறுமை பீடை தரித்திரம் இவைகளை எல்லாம் விரட்டி அடித்து, வீட்டில் சிவன் பார்வதி குடிக்கொள்ள வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது என்ன. ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டையும் மந்திரத்தையும் இன்று தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் எல்லாம் எந்த நேரத்தில் எழுந்தாலும் சரி, வீட்டில் இருக்கும் பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வாசல் கூட்டி கோலம் போட்டு, வீட்டை கூட்டி சுத்தம் செய்து விட வேண்டும். பிறகு குளித்துவிட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சாம்பிராணி வத்தி ஏற்றி வையுங்கள். வீடு மங்களகரமாகும்.

இந்த வேலையை செய்தாலே உங்கள் வீட்டை பிடித்த தரித்திரத்தில் பாதி விலக்கிவிடும். பிறகு அந்த தெய்வத்தின் அனுகிரகம் நமக்குத் தேவை அல்லவா. பூஜை அறையில் அமர்ந்து பராசக்தி தேவியையும் எம்பெருமானையும் மனதார பிரார்த்தனை செய்து, இந்த ஒரு வரி மந்திரத்தை மனப்பூர்வமாக உச்சரியுங்கள்.

- Advertisement -

குடும்பம் சுபிட்சம் அடைய சிவ மந்திரம்

சர்வசர நம சிவாய!

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். குடும்பத்தில் சர்வ சகலமும் உங்களுக்கு நல்லபடியாக நடக்கும். சொல் பேச்சைக் கேட்காத கணவர், சொல்பேச்சு கேட்காத பிள்ளைகள் எல்லாம் உங்களுடைய பேச்சைக் கேட்க நடக்க தொடங்குவார்கள். வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் விலகும் தரித்திரம் விலகும் வீடு சுபிட்சம் அடையும்.

- Advertisement -

தொடர்ந்து 48 நாட்கள் இதே போல வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இடையில் மாதவிடாய் நாட்கள் வந்தால் மட்டும் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள் 48 நாட்கள் வழிபாட்டை நிறைவு செய்து விட்டீர்கள். உங்களுடைய வீடு கோவிலாக மாறிவிட்டது. பிறகும் இந்த வழிபாட்டை தொடலாமா. தாராளமாக தொடலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: சுக்கிர தோஷம் விலக எளிமையான பரிகாரங்கள்

அந்த அம்மையப்பன் உங்கள் குடும்பத்தை காக்கும் வேலையை தொடர்வாங்க. எம்பெருமானின் அருளும் சக்தி தேவியின் அன்பும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -