தீய சக்திகளால் உங்கள் வீட்டுக்கோ, வீட்டில் இருப்பவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி வையுங்கள்.

door-vasal-lakshmi
- Advertisement -

கெட்ட சக்தியின் ஆதிக்கமும் கண் திருஷ்டியின் கலக்கமும், இன்றும் நம்மில் நிறைய பேரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஏதாவது ஒரு கஷ்டம் திடீரென்று வீட்டில் தலைதூக்குகிறது என்று சொன்னால், அதற்குப் பின்னால் ஏதோ ஒரு தவறு நடக்கிறது என்றுதான் அர்த்தம். அது கண் திருஷ்டி பாதிப்பாக இருக்கலாம். அல்லது செய்வினை பாதிப்பாக இருக்கலாம். இன்றும் சிலபேர் செய்வினை வைப்பது, கெடுதல் செய்வது, பில்லி சூனியம் வைப்பு என்று நிறைய பிரச்சனைகளை அடுத்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது தவறான விஷயங்களை செய்துவிட்டு அடுத்தவர்களுடைய நிலை வாசலில் கொண்டு போய் அதை தூக்கிப்போட்டு வருவது முதல், எதிராளி நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக சில கெட்ட எண்ணம் கொண்டவர்கள் செய்யும் பல சம்பவங்களை நாம் பார்ப்பது உண்டு.

உங்களுடைய வீட்டிலும் இப்படிப்பட்ட ஏதாவது சம்பவங்கள் நடந்திருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை உங்களுக்கு ஏதோ ஒரு சந்தேகம் இருக்கிறது. யாரோ ஒருவர் உங்களுக்கு செய்வேனே வைத்து விட்டதாக நீங்கள் உணர்ந்தாலும், இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இந்த பரிகாரம் கண் திருஷ்டியையும் உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாது. கெட்ட சக்தியையும் வீட்டிற்குள் நுழைய விடாது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் சதுர வடிவில் இருக்கும் சிவப்பு நிற துணி. அதன் உள்ளே கல்லுப்பு  கைப்பிடி அளவு, வர மிளகாய் 3, கடுகு 1 ஸ்பூன், மிளகு 18, இந்த பொருட்களை எல்லாம் வைத்து அதை முடிச்சாக கட்டி விட வேண்டும். இந்த முடிச்சுக்கு மேலே நாம் ஒரு கருப்பு நிற பொருளை தடவ வேண்டும்.

அந்த கருப்பு நிற மையை நீங்கள் ஹோமம் நடக்கக்கூடிய இடத்தில் இருந்து எடுக்கலாம், அல்லது கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் அல்லவா, அங்கேயும் கும்பாபிஷேக ஹோமத்தில் இருந்து கொஞ்சமாக எடுத்து கருப்பு மை தருவார்கள். அந்த மை கிடைத்தால் ரொம்பவும் நல்லது. இதில் உங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றால், ஒரு மை டப்பாவை வாங்கி தொட்டு இரண்டு கருப்பு புள்ளிகளை அந்த சிவப்பு நிற முடிச்சிக்கு மேல் வைத்துவிட்டு, அதன் பின்பு, தயார் செய்த சிவப்பு முடிச்சை நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்தில் ஒரு ஆணியில் மாட்டி வைத்து விட வேண்டும். இந்த முடிச்சை அமாவாசை அன்று தயார் செய்து நிலை வாசலில் மாட்டுவது மிகவும் நல்லது.

- Advertisement -

இந்த கருப்பு மை உங்கள் வீட்டிற்குள் வரும் கண் திருஷ்டி கெட்ட சக்தியை அப்படியே வெளியே தள்ளிவிடும். இந்த முடிச்சுக்குள் இருக்கும் கடுகு கெட்ட ஆத்மாக்களை உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாது. இதே போல மிளகு வர மிளகாய் உப்பும் இந்த மூன்று பொருட்களும் தன்னை பொசுக்கிக் கொண்டு, தன்னை உருக்கி கொண்டு நமக்கு நன்மை செய்யக் கூடிய பொருட்கள் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

மாதம் ஒருமுறை அமாவாசை நாளில் இந்த முடிச்சை தயார் செய்து மாட்டி விட வேண்டும். எந்த நேரம் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்த அமாவாசை தினம் வரும் போது இதை எடுத்து நிலை வாசலுக்கு வெளியே வைத்து இரண்டு கற்பூரத்தை வைத்து நெருப்பில் பொசிக்கி விடலாம். முடிந்தால் இரவு நேரத்தில் இதை நெருப்பில் பொதுக்குவது நல்லது. இதை நெருப்பில் எரிய வைக்க முடியாதவர்கள், வீட்டிற்கு வெளிப்புறமாக கொண்டு போய் தூரமாக குப்பையில் தூக்கி போட்டு விட்டு வரலாம். அப்படி இல்லை என்றால் ஓடுகின்ற தண்ணீரில் இந்த முடிச்சை விட்டு விடலாம். மாதம் தோறும் இந்த பரிகாரத்தை செய்து வரும் போது உங்களுடைய வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை உணர முடியும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -