உடம்பில் இருக்கும் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பை தரும் சோம்பு! இதை தெரிந்து கொண்டால் பெயர் புகழ் வெற்றி உங்கள் பக்கம்.

sombu1
- Advertisement -

சில பேர் அறிவாளியாக இருப்பார்கள், திறமைசாலியாக இருப்பார்கள், எதையும் சாதிக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் அவர்களால் முன்னேற முடியாததற்கு காரணம், அவர்கள் மிகமிக சோம்பேறியாக இருப்பார்கள். இந்த சோம்பேறித்தனம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் வெற்றி என்பது நிச்சயமாக இருக்காது. சோம்பேறி தனத்தோடு சேர்ந்து இருக்கும் அறிவாற்றல் என்றைக்குமே பயனுள்ளதாக அமையாது. ஒரு மனிதனிடம் இருக்கக் கூடாது ஒரு வியாதி என்றால் அதில் முதலிடத்தைப் பிடிப்பது இந்த சோம்பல்.

lazy

சோம்பல் ஒரு மனிதனை வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுக்கும் முதல் காரணமாக சொல்லப்பட்டுள்ளது. சோம்பேறித்தனத்தை துரத்தி அடித்து விட்டாலே போதும். வாழ்க்கையில் இருக்கும் இருள் தானாக விலகி விடும். இந்த சோம்பலை விளக்க ஆன்மீக ரீதியாக சுலபமாக நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்திய கூடிய பொருள் தான் இந்த சோம்பு. இந்த சோம்பில் ஆரோக்கிய ரீதியாக நிறைய குணாம்சங்கள் நிறைந்துள்ளன. சோம்புக்கு சோம்பலை முறிக்கக் கூடிய சக்தி உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. தினமும் நீங்கள் வெளியே செல்லும் போது, நீங்கள் செல்லும் வேலை வெற்றிகரமாக முடிய வேண்டும் என்றால் இரண்டு சோம்பை வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

இப்படி செய்தால் நீங்கள் வெளியே செல்லும் அந்த வேலை உங்களுக்கு சாதகமாக நல்லபடியாக முடியும். சோம்பலை போக்க சோப்பினை எப்படி பயன்படுத்துவது. ஒரு சிறிய கண்ணாடி டப்பாவை எடுத்து கொள்ளுங்கள். காப்பித்தூள் போட்டு வந்த கண்ணாடி பாட்டில், ஊறுகாய் போட்டு வந்த கண்ணாடி பாட்டில் வீட்டில் எது இருந்தாலும் அதை சுத்தப்படுத்தி வைத்து இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

சுத்தம் செய்த பாட்டிலில் ஒரு கைப்பிடி அளவு சோம்பை போட்டு கொள்ள வேண்டும். ஒரு வெள்ளை பேப்பரில் உங்களுடைய பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அதை சுருட்டி இந்த சோம்பு பாட்டிலுக்குள் போட்டு வைத்து விடுங்கள். ஒரு மூடியைப் போட்டு இந்த பாட்டிலை மூடி வைத்துவிட வேண்டும்.

தினமும் காலையில் எழுந்து சுத்தமாக பல் தேய்த்துவிட்டு குளித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து இறை வழிபாட்டை முடித்து விட்டு, இந்த சோம்பு பாட்டிலைத் திறந்து 3 முறை உங்கள் வாயால் காற்றினை பாட்டிலுக்குள் உள்ள சோம்பில் ஊத வேண்டும். மீண்டும் அந்த சோம்பு பாட்டிலை மூடி போட்டு மூடி வைத்துவிடுங்கள்.

praying-god1

அவ்வளவு தான். தினம்தோறும் இதை மட்டும் நீங்கள் செய்து வாருங்களேன். உங்களுடைய உடம்பிலிருக்கும் சோம்பேறித்தனம் உங்களை அறியாமலேயே உங்களை விட்டு விலகிவிடும். காரணம் உங்களுடைய பெயர் எழுதி சோப்பு டப்பாவில் உள்ளது. உங்களுடைய மூச்சுக்காற்று அந்த சோபாவில் உள்ளது. அந்த சோம்பு வெளிப்படுத்தக்கூடிய நேர்மறை ஆற்றல், சோம்பில் இருக்கும் மகத்துவம் உங்களை சுறுசுறுப்பாக மாற்றிவிடும்.

sucess

சுறுசுறுப்பான உங்கள் வாழ்க்கை முறைகள், பின்பு பெயர் புகழ் வெற்றி அனைத்தும் உங்கள் பின்னால் வரத் தொடங்கும். முழு நம்பிக்கையோடு செய்தால் இந்த பரிகாரத்தின் மூலம் உடனடியாக பலனை பெற முடியும். இந்த பரிகாரத்தின் மூலம் நஷ்ட படுவதற்கு எதுவுமே கிடையாது. ஒரு கைப்பிடி சோம்பு தான். ஆனால் பரிகாரம் சக்சஸ் ஆகி விட்டால் உங்கள் வாழ்க்கையில் பல திருப்பு முனைகளை பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -