வீடு கட்ட அபிராமி அந்தாதி பதிகம்

veedu
- Advertisement -

அபிராமி அந்தாதி. நம்முடைய சங்ககால இலக்கிய நூல்களில் சிறப்பு வாய்ந்தது. அபிராமி பட்டர், அம்பாளை வேண்டி வணங்கி, பாடிய பாடல்கள் தான் அபிராமி அந்தாதியில் இடம்பெற்றுள்ளது. தினமும் எவர் ஒருவர், அம்பாளை நினைத்து அபிராமி அந்தாதி பாடல்களைப் படித்து வருகிறார்களோ, அவர்களுக்கு வாழ்க்கையில் இன்பம் மட்டும் தான் இருக்கும். துன்பம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது.

பொன் பொருள் செல்வ செழிப்பு எல்லாம் அள்ளித் தரக்கூடிய பாடல் வரிகள் இவை. இதன் சிறப்புகளை வார்த்தைகளால் இந்த ஒரு பதிவில் சொல்லி முடித்து விட முடியாது. அந்த வகையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சொந்த நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சொந்த வீடு கட்டி பாதியிலேயே நிற்கிறது,  என்பவர்களும் இந்த பதிகத்தை படிக்கலாம்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் உங்களுக்கு வர வேண்டிய பிரமோஷன் வரவில்லை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவில்லை, எல்லாம் பாதியிலேயே தடைப்பட்டு நிற்கிறது என்பவர்களும் இந்த பாடல் வரிகளை தினம் தோறும் படித்தால், அந்த காரிய தடையை உடைத்தெரிக்க கூடிய சக்தி அபிராமி அந்தாதியின் இந்த பாடலுக்கு உள்ளது. அது என்ன பாடல், அதை தினமும் எப்படி படிக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வீடு வாங்க அபிராமி அந்தாதி பாடல்

குடும்பத்தலைவன் அல்லது தலைவி யாராக இருந்தாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பின்பு அபிராமி அந்தாதியில் இருக்கும் 68 ஆவது பாடலான இந்த பாடலை படிக்க வேண்டும். 27 முறை படிக்கலாம். 51 முறை, 108 முறை உங்களுடைய விருப்பம் தான்.

- Advertisement -

அம்பாளை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். எம்பெருமான ஈசனையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினையை சொல்லி அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று இந்த பாடல் வரிகளை படிக்கலாம். உங்களுக்காக அபிராமி அந்தாதியின் 68 ஆவது பாடல் வரிகள் இதோ.

அபிராமி அந்தாதியின் 68 ஆவது பதிகம்

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளிஊறு ஒலியொன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே.

- Advertisement -

எளிமையான தமிழில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிகள் இவை. ஆகவே தொடர்ந்து 48 நாட்கள் தினமும் இந்த பாடல் வரிகளை படித்து வாருங்கள். உங்கள் நிலம் சம்பந்தப்பட்ட, வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை அந்த அபிராமி தாய் காட்டி கொடுப்பாள். மனம் உருகி நம்பிக்கையோடு இந்த பாடல் வரிகளை படித்தவர்கள் யாரும் தோற்றுப் போனதாக சரித்திரமே கிடையாது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர விநாயகர் வழிபாடு

நம்முடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க அம்பாளை விட ஒரு பெரிய சக்தி இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன. அம்பாளை முழு மனதோடு நம்பி இந்த பாடலை படித்தால் நிச்சயம் உங்களுடைய சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேறும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -