பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய இந்த 1 பொருளை வாங்கிக் கொடுத்தால் போதும். சொந்த வீடு கட்டும் கனவு சீக்கிரத்தில் நிறைவேறும்.

sivan
- Advertisement -

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் கையில் பணம் இல்லை என்ற ஒரே காரணத்தினால் வாடகை வீட்டில் தங்க வேண்டியிருக்கும் சூழ்நிலை. பரவாயில்லை, சொந்த வீடு வாங்கவேண்டும் என்ற கனவை நிஜமாக்க வேண்டுமென்றால் அயராமல் உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருங்கள். கூடவே இறை நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிலம் வாங்கி வைத்திருக்கின்றோம். புது வீடு கட்ட வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். வீடு கட்டி பாதியில் நிற்கின்றது, மீதி வீட்டை நல்லபடியாக கட்டிமுடிக்க வேண்டும் என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் பழமையான சிவன் கோவில் ஏதாவது இருக்கின்றது. அந்த கோவிலை புதுப்பிப்பதற்கான பணிகள் தொடங்கி கொண்டிருக்கின்றது எனும் பட்சத்தில், உங்களால் முடிந்த உதவியை அந்த கோவிலுக்கு செய்ய வேண்டும். ஒரு மூட்டை சிமெண்ட் வாங்கி கொடுக்கலாம். 10 செங்கற்கள் வாங்கிக் கொடுக்கலாம். முடியவில்லை என்றால் நூறு ரூபாயாவது கொடுத்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

அடுத்தபடியாக பிரதோஷ வழிபாட்டிற்கு வருவோம். பிரதோஷத்தன்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய நார்த்தங்காய் வாங்கி கொடுக்க வேண்டும். ஊறுகாய் போட பயன்படுத்துவார்கள் அல்லவா நார்த்தங்காய். அந்த சாறை எடுத்து சாதம் செய்வோம் அல்லவா. அதுபோல நார்த்தங்காயை வாங்கி பிரதோஷத்தன்று சிவன் கோவிலில் கொடுத்தால், அவர்கள் அந்த நார்த்தங்காயை இரண்டாக வெட்டி அதில் வரும் சாறு எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

- Advertisement -

நார்த்தங்காயை சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக நம் கையால் வாங்கிக் கொடுக்கும் போது, நம்முடைய சொந்த வீடு ஆசை சீக்கிரத்தில் நிறைவேறும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதேபோல வெண் தாமரையை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்காக வாங்கிக் கொடுக்கவேண்டும். ஒரே ஒரு வெண்தாமரை பூ கிடைத்தாலும் பிரதோஷத்தன்று அதை உங்கள் கையால் வாங்கி சிவபெருமானுக்கு கொடுங்கள். இப்படியாக எத்தனை பிரதோஷங்கள் உங்களால் வாங்கி கொடுக்க முடியுமோ, இந்த இரண்டு பொருளையும் சிவபெருமானுக்கு மனநிறைவோடு நம்பிக்கையோடு வாங்கிக் கொடுக்கவேண்டும்.

பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலிலேயே அமர்ந்து உங்களுக்கு சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்று மனதார சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளும் போது, அதற்கான பிராப்தம் கூடிய சீக்கிரத்தில் கிடைக்கும். முழு நம்பிக்கையோடு இறைவனிடம் எது கேட்டாலும் அது உடனடி நடக்கும். நம்பிக்கை என்பதை முதலில் நாம் நம் மேல் வைக்கவேண்டும். அதன் பின்பு நாம் செய்யக்கூடிய பரிகாரத்தின் மேல் வைக்க வேண்டும். முதலில் நம்புங்கள். நம்பமுடியாத அதிசயம் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் ஒன்றன்பின் ஒன்றாக நடக்க தொடங்கும்.

- Advertisement -