நாளை 11/9/2022 ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்ய வெற்றி வாய்ப்புகள் உங்களுக்கு தான் தெரியுமா? மனதில் உள்ள ஆசைகள் நிறைவேற எளிய ஞாயிறு வழிபாடு!

- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் மனதிற்குள் இருக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று இளைஞர்களும், நிறைய மார்க் எடுக்க வேண்டும் என்று மாணவர்களும் மனதில் ஆசைகளை வளர்த்துக் கொள்வது உண்டு. இந்த வேண்டுதல்களை எளிதாக நிறைவேற்றக் கூடிய அற்புதமான நேரத்தில் சூரிய வழிபாடு செய்வது ரொம்பவே விசேஷமானது. அப்படியான ஒரு நேரம் நாளை என்ன? நாளை எவ்வாறு சூரிய வழிபாடு செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக சூரியனுக்கு உகந்த மாதமாக இருக்கக் கூடிய இந்த ஆவணி மாதத்தில் தொடர்ந்து சூரிய வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் யாவும் நீங்கும். சரியான வேலை அமையாதவர்களுக்கு இந்த சூரிய வழிபாடு நல்ல ஒரு வேலையை பெற்று தரும். அரசு வேலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், புதிய வேலையை அமைத்துக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் சூரிய வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

பொதுவாக வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் காலை 6 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆறு மணிக்கு எழுந்து சூரியனை பார்த்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான இந்த சூரிய ஹோரையில் நாளை சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து கையில் ஒரு செம்பு அல்லது பித்தளை குவளையில் தண்ணீரை நிரப்பி சூரியனை வணங்கி கீழ் வரும் இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து பூமியில் தண்ணீரை விட வேண்டும்.

சூரிய காயத்ரி மந்திரம்:
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே,
பாச ஹஸ்தாய தீமஹி,
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்!

- Advertisement -

அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும் படிக்கும் மாணவர்கள் இந்த வழிபாடை செய்யலாம். அது போல வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் சூரிய வழிபாடு மேற்கொள்ள வீட்டில் பூஜை அறையில் ஒரு சிறிய அளவிலான பித்தளை தட்டில் கோதுமையை நிரப்பிக் கொள்ளுங்கள். சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை ஆகும். எனவே கோதுமையை நிரப்பி அதன் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து பஞ்சு திரியிட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மனதார சூரிய பகவானை வழிபடுங்கள். இவ்வாறு செய்வதால் சூரிய அருள் கிடைத்து நமக்கு நிறையவே வெற்றி வாய்ப்புகளும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும்.

மேலும் கோதுமையால் செய்யப்பட்ட நைவேத்தியம் படைத்து வழிபடலாம். அது மட்டும் அல்லாமல் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்றி, வலம் வந்து வணங்கி கோதுமையை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதாலும் சூரிய அருள் பரிபூரணமாக கிடைத்து நம் வாழ்வில் இருந்து வந்த தோல்விகள் அனைத்தும் மறைந்து ஏற்றத்தை காணலாம். நம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? நாம் ஜெயிப்போமா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை தெரிவதில்லை. இப்படி தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் காலையில் சீக்கிரம் எழுந்து சூரியனை வணங்கி வாருங்கள், உங்களுக்கு தோல்வி என்பதே ஏற்படாது. தொடர் வெற்றிகள் குவிய இந்த சூரிய வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கும்.

- Advertisement -