கொடுத்த கடன் திரும்பி வராம போவதற்கு இது கூட காரணமாக இருக்கலாம் தெரிஞ்சுக்கோங்க! சொத்துக்கள் வாங்குவதில் தடைகள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன?

perumal-cash
- Advertisement -

கடன் வாங்குபவர்கள் ஒரு புறம் இருக்க, கடன் கொடுப்பவர்கள் இன்னொரு புறம் உள்ளனர். கடன் கொடுப்பவர்கள் கொடுத்த கடனை வசூல் செய்வதற்குள் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதுவும் இந்த காலகட்டத்தில் கொடுத்த கடன் திரும்ப வருமா? என்பதில் நிறையவே சந்தேகங்கள் உண்டு. இந்த நிலையில் நீங்கள் கடன் கொடுக்கும் முன்பு யோசிக்க வேண்டியது என்ன? அது போல சொத்துக்கள் வாங்கும் ஆசை இருந்தாலும், அதை வாங்க முடியாமல் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். சொத்துக்கள் வாங்குவதில் இருக்கும் தடைகள் நீங்கி, ஆசைப்பட்டபடி நீங்கள் சொத்துக்கள் வாங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இவ்விரண்டு விஷயங்களை பற்றிய ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கொடுத்த கடன், பொருள், நகை, பணம், சொத்து என்று எதுவும் கொடுக்கும் முன்பு நம்முடைய கேலண்டரில் இந்த நட்சத்திரம் இருக்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும் என்கிறது ஜோதிடம். ஜோதிட ரீதியாக சில நட்சத்திரங்கள் கடன் கொடுக்க உகந்தவையாக இருப்பது கிடையாது. அந்த நட்சத்திரம் இருக்கும் காலத்தில் நீங்கள் கடன் கொடுக்க நேர்ந்தால் கண்டிப்பாக அது திரும்ப வராமல் போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டாம்.

- Advertisement -

அந்த வகையில் சுவாதி நட்சத்திரம் இருக்கும் காலகட்டத்தில் நீங்கள் எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கக் கூடாது. பொன், பொருள், பணம் என்று எதைக் கொடுத்தாலும் அதை சுவாதி நட்சத்திரத்தில் கொடுக்கவே கூடாது. மற்ற நட்சத்திரங்கள் இருக்கும் காலத்தில் நீங்கள் கொடுக்கலாம், அதுவும் வெள்ளிக் கிழமையில் கண்டிப்பாக கொடுக்காதீர்கள்.

அது போல நீங்கள் புதிதாக ஏதாவது ஒரு இடம் வாங்க வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதில் தொடர்ந்து தடைகள் வரக்கூடும். இது போல இருக்கக் கூடிய காலகட்டங்களில் நீங்கள் உங்களுடைய காலண்டரில் திருவோண நட்சத்திரம் என்று வருகிறது? என்று பார்த்துக் கொள்ளுங்கள். அன்றைய தினத்தில் பெருமாள் வழிபாடு செய்து வர வேண்டும்.

- Advertisement -

இடம் மட்டுமல்ல எந்த சொத்தாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் இந்த எளிய பரிகார வழிபாட்டை செய்து வந்தால் விரைவில் அதை வாங்கி விடலாம். முடிந்த வரை திருவோண நட்சத்திரத்தில் இல்லாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்து வாருங்கள். குறிப்பாக அன்ன தானம் செய்வது சிறப்பான பலன்களை தரும். திருவோண நட்சத்திரத்தில் விஷ்ணு பகவானுக்கு துவரம் பருப்பால் செய்த பாயாசத்தை நைவேத்தியம் படைக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் துளசியால் 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.

பின்னர் மனதார உங்களுடைய பிரார்த்தனைகளை வேண்டிக் கொள்ள வேண்டும். நான் இடம் வாங்க வேண்டும் அல்லது மனை வாங்க வேண்டும், பொருள் சேர வேண்டும் என்று உங்களுக்கு என்ன ஆசை இருக்கிறதோ, அந்த சொத்து வாங்குவதற்கான பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் நைவேத்தியம் படைத்த அந்த துவரம் பருப்பு பாயாசத்தை அனைவருக்கும் தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வர விரைவாகவே நீங்கள் நினைத்த சொத்துக்களை வாங்குவீர்கள்.

- Advertisement -