2 நிமிடத்தில் வெங்காயம், பூண்டு எதுவும் சேர்க்காமல் காரசாரமான தக்காளி சட்னி இப்படி செஞ்சு பாருங்க! 1 வாரம் கூட வச்சு சாப்பிடலாம்.

spicy-tomato-chutney
- Advertisement -

தக்காளி சட்னி என்றாலே அதில் கட்டாயம் வெங்காயமும் சேர்ந்து விடும். வெங்காயம் இல்லாமல் தக்காளி சட்னி காரசாரமாக ரொம்ப ரொம்ப சூப்பராக செய்யலாம். இதற்கு பூண்டு கூட சேர்க்க தேவையில்லை. அவசரமான நேரத்தில் இந்த சட்னியை ஐந்தே நிமிடத்தில் சட்டென செய்து விடலாம். எல்லா விதமான டிபன் வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும் இந்த சட்னி வெளியில் மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம், அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். இந்த ஸ்பைசி தக்காளி சட்னி எப்படி செய்வது? என்று நீங்களும் தெரிஞ்சுக்க தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்க!

tomato-grow3

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 10, தக்காளி – 6, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 10 லிருந்து 12 வர மிளகாய்களை உங்கள் காரத்திற்கு தகுந்தாற் போல் எடுத்துக் கொள்ளுங்கள். குண்டு மிளகாய் எடுக்கக் கூடாது அது அதிகம் காரம் தரும். நீளமாக இருக்கும் காய்ந்த மிளகாயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அப்படியே போட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக நைசாக அரை படாது. எனவே அதில் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தக்காளி பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து அதன் காம்பு பகுதியை மட்டும் நீக்கி நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

tomato-chutney1

இப்போது மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகாய் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி விட்டு மிளகாயை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெட்டி வைத்த தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் அதில் கறிவேப்பிலையை உருவி போட்டு தாளியுங்கள். பின்னர் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்டு கொள்ளுங்கள்.

road-side-tomato-chutney

பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு கொதித்து வந்தால் தான் பச்சை வாசம் போகும். எண்ணெய் மேலே தெளிந்து பச்சை வாசனை போன பின்பு அடுப்பை அணைத்து விட வேண்டியது தான். அவ்வளவு தான் ரொம்ப ரொம்ப சுலபமாக கெட்டியான இந்த காரசாரமான தக்காளி சட்னி இட்லி, தோசை, உப்புமாவுக்கு மட்டுமல்லாமல் சப்பாத்தி, பூரிக்கு கூட தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -