அசுர வேகத்தில் முடி வளர்ச்சி பெற அரிசி களைந்த தண்ணீரில் சேர்க்க வேண்டிய 3 பொருட்கள். 3 மாதத்தில் முடி வளர்ச்சியை பார்த்து அசந்து போவீங்க.

hair
- Advertisement -

முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடியை சீக்கிரமாக வளர செய்ய இந்த அரிசி களைந்த தண்ணீர் மிகவும் நல்லது என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். முடி உதிர்வு அதிகமாக இருப்பவர்கள் இந்த அரிசி களைந்த தண்ணீரால் தலை முடியை அலசி வந்தாலே போதும். முடி உதிர்வு கொஞ்ச நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஒரு நாளில் நிச்சயம் முடி உதிர்வு கட்டுப்படாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த அரிசி களைந்த தண்ணீரில் முடியை அலசி வர நிச்சயமாக நல்ல ரிசல்டை எதிர்பார்க்க முடியும்.

அதாவது தலைக்கு குளித்து முடித்துவிட்டு, இறுதியாக இந்த அரிசி களைந்த தண்ணீரை தலையில் ஊற்றி ஒரு முறை தலையை அலசிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து வர நிச்சயம் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும். சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த அரிசி களைந்த தண்ணீரை இன்னும் வலுவாக மாற்றுவது எப்படி. அதாவது இன்னும் சில பொருட்களை இந்த அரிசி களைந்த தண்ணீரோடு சேர்க்கும் போது நமக்கு பலன் பல மடங்கு அதிகமாக கிடைக்கும்.

- Advertisement -

அது எந்தெந்த பொருள். அந்தப் பொருளை எப்படி அரிசி களைந்த தண்ணீருடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு பெரிய மூடி போட்ட பாட்டிலாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரிசி 2 கைப்பிடி அளவு, தண்ணீர் 1 பெரிய சொம்பு அளவு, கிராம்பு 7 லிருந்து 10, பெரிய பிரியாணி இலை 1 சிறுசிறு துண்டுகளாக வெட்டி இதோடு போட்டுக் கொள்ளுங்கள். மூடி போட்டு பாட்டிலை நன்றாக குலுக்கி 24 மணிநேரம் அப்படியே இந்த தண்ணீரை வைத்து விடுங்கள். அந்த தண்ணீரில் அரிசி கிராம்பு பிரியாணி இலை மூன்றுமே நன்றாக ஊற வேண்டும்.

இருபத்தி நான்கு மணி நேரம் கழித்து பாட்டிலில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். மீடியம் சைஸ் இருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து துருவி சாரு பிழிந்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். (இந்த வெங்காய சாறு, இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய்யையும், அரிசி ஊற வைத்து வடிகட்டி எடுத்து தண்ணீரோடு சேர்க்கவேண்டும்.)

- Advertisement -

இந்த கலவையை ஒரு முறை நன்றாக குலுக்கி விடுங்கள். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த ஸ்பிரேவை உங்களுடைய தலையில் ஸ்பிரே செய்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து அதன் பின்பு தலையை வெறும் தண்ணீரில் அலசி விட்டால் கூட போதும். சில பேருக்கு இந்த வெங்காய வாடை பிடிக்காது அல்லவா. தேவைப்பட்டால் ஷாம்பு போட்டுக் கூட முடியை அலசிக் கொள்ளலாம்.

இந்த ஸ்பிரே வாட்டரை ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் 5 நாட்கள் வரை கெட்டுப் போகாது. மூன்று மாதம் இந்த குறிப்பை பின்பற்றி வருபவர்களுக்கு, முடி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகரிக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. மிகவும் சுலபமான குறிப்புதான். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -