அஷ்டலட்சுமிகளில் அருள்பெற 1 ரூபாய் மதிப்புள்ள இந்த ஒரு சின்னம் இருந்தால் போதும் தெரியுமா?

- Advertisement -

நாம் எந்த ஒரு பொருளை அடிக்கடி பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறதோ, அந்தப் பொருளின் தாக்கம் நமக்குல் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. அந்த வரிசையில் மங்களகரமான பல பொருட்கள் இருந்தாலும், ஸ்வஸ்திக் சின்னத்திற்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது பொய்யாகாது. காலையில் எழுந்தவுடன் மட்டும் இல்லாமல், நீங்கள் எந்த இடங்களை, அதிகமாக பார்க்கின்றீர்களோ, அந்த இடத்தில் இந்தச் சின்னத்தை ஒட்டிக் கொள்ளலாம்.

swastik symbol benefits tamil

எடுத்துக்காட்டாக மொபைல் ஃபோனை அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தால், அதில் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதிலிருந்தே, உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும், நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய, சின்னம் சுவஸ்திக் சின்னம் என்பது. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டில் வைத்தால், நல்லது என்பது பலபேருக்கு தெரிந்திருந்தாலும், சுவஸ்திக் சின்னத்துக்கான முழு அர்த்தம் என்ன என்பது சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பெண்களாக இருந்தால் வீட்டு சமையல் அறையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்களது வாகனங்களில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையானது தோல்வி இல்லாத வாழ்க்கையாக மாறும் என்பதும், தடையில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஸ்வஸ்திக் சின்னமானது உறுதுணையாக இருக்கும் என்பதும், வெற்றியை விரைவாக நமக்கு தேடித்தரும் சின்னமாக இருக்கும் என்பதும் உண்மையான ஒன்று.

swastik symbol benefits tamil

இதனால்தான் இந்த சின்னத்தை, வியாபார கணக்கு எழுதும் புத்தகத்தில் குங்குமத்திலோ அல்லது மஞ்சளிலோ வரைந்து வைப்பார்கள். சிலபேரது பூஜை அறையிலும் இந்த சின்னம் இருக்கும். சிலபேரது வாசல் கதவிலும் இந்த சின்னம் ஒட்டி இருப்பதை நாம் கண்டிருப்போம். இதற்கு காரணம் வெற்றியைத் தரக்கூடிய இந்த சின்னத்தை அடிக்கடி பார்க்கும் போது நமக்குள் ஏற்படும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பதால் தான்.

- Advertisement -

விநாயகரின் அம்சமாக கருதப்படும் இந்த சின்னம், விநாயகரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. செங்கோண வடிவைக் கொண்ட இந்த ஸ்வஸ்திக் சின்னம், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் போடப்படும் ஒரு சின்னம் ஆகும். இதில் இருக்கும் எட்டு கோடுகள் எட்டு திசைகளை குறிக்கின்றது. இந்த சின்னத்தில் நான்கு மூலைகளிலும் வைக்கப் படும் புள்ளியானது, மனிதர்களின் ஆன்மாவைக் குறிக்கிறது. இந்த ஆன்மா எப்போதுமே, எட்டுத்திக்கிலும் இருக்கும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பதாக ஒரு அர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

swastik palan

இதோடு மட்டுமல்லாமல் இந்த சின்னத்தில், இருக்கும் நான்கு கோணங்கள் 4 வேதத்தையும், 4 திசைகளையும், 4 யுகங்களையும், 4 மூலங்களையும், 4 பருவங்களையும் குறிப்பிடுவதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த சின்னத்தை இரவு நேரத்தில் பார்ப்பது மிகவும் சிறந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக, 10 நிமிடங்களுக்கு முன்பு, இந்த சின்னத்தை உற்றுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னமானது, உங்கள் மனதில் பதிய வேண்டும். குறிப்பாக இந்த சின்னம் சிவப்பு நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் இருந்தால் நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Swastik

அதாவது நீங்கள் தூங்குவதற்காக கண்களை மூடினாலும், நீங்கள் பார்த்த இந்த ஸ்வஸ்திக் சின்னம் உங்கள் கண்முன்னே நிற்கும் அளவிற்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அந்த சமயம் உங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில், கொண்டு செல்வது போல் நினைத்து கொள்ள வேண்டும். நீங்கள் செயல்படுத்தும் காரியமானது நிச்சயம் வெற்றியில் தான் போய் முடியும். வெற்றியை நீங்கள் விரைவாக அடையப் போகிறீர்கள்! வெற்றி! வெற்றி! வெற்றி! என்ற எண்ணத்தை மனதில் நன்றாக விதைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

Swastik

வெற்றி உங்களுக்கு மிக அருகில்தான் இருக்கின்றது என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்த சின்னம், உங்களது மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும். உங்களால் கூடிய விரைவில் இதை உணரமுடியும். தினந்தோறும் இந்த பயிற்சியை எடுத்துப்பாருங்கள். வெற்றியை தாண்டி உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் குறுக்கிடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -