Tag: கருவூர்த்தேவர்
சிவனையே நடு நடுங்கவைத்த சித்தரை பற்றி தெரியுமா ?
கருவூர்த்தேவர் கொங்குநாட்டில் உள்ள கருவூரில் பிறந்தவர். பிறந்த ஊரோடு இணைத்து இவரது திருப்பெயர் கருவூர்த்தேவர் என வழங்கப்படுகிறது. இவரது இயற்பெயர் என்ன என்பது தெரியவில்லை. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ச்சி பெற்ற கருவூரார், யோக சித்திகள் கைவரப் பெற்றவர். போக முனிவரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றவர்.