தொழிலில் வெற்றி பெற வேண்டுமா? இதோ உங்களுக்கான அற்புத கோவில்

sivan1
- Advertisement -

நீங்கள் தொழில் செய்பவரா ? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதே என்று கஷ்டப்படுகிறீர்களா? கவலையே வேண்டாம். உங்களுக்கு அருள்புரிவதற்காகவே இறைவனும் இறைவியும் ஒரு திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கிறார்கள்.

temple

அந்தத் தலத்தில்,‘கையில் தராசு பிடித்தபடி சிவபெருமான், அளவைப்படியை கையில் ஏந்தி பார்வதி இப்படி இறைவனும், இறைவியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார்கள்.  திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம்.

- Advertisement -

புதிதாய் வியாபாரம் தொடங்குவோர், தொழில் செய்வோர், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என எல்லோரும் இங்கு வந்து தரிசனம் செய்தால் தொழில் சிறக்கும், செல்வம் செழிக்கும் என நம்புகிறார்கள். இத்தலத்தின் சிறப்புகள் பற்றி விவரிக்கிறார் கைலாசக் குருக்கள்,

temple

“அய்யனே இங்கு வந்து வியாபாரம் செய்ததால் இந்த ஊருக்கு ‘அய்யன்பேட்டை’ என்று பெயர் ஏற்பட்டது. ஒருகாலத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் உணவுக்கே தவியாய் தவித்தபோது, திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், திருவீழிமிழலையில் இறைவனிடம் முறையிட, அவரோ முன்கோபுர வாசலில் திருநாவுக்கரசருக்கும், பின்கோபுர வாசலில் திருஞானசம்பந்தருக்கும் தினந்தோறும் தங்கத்தில் படிக்காசு தந்தார். ‘இந்த காசுகளை எடுத்துப்போய் பொருள் வாங்குவது எங்கே? தொண்டர்களுக்கு உணவு படைப்பது எங்கே?’ என்று மீண்டும் இறைவனையே நாட, ‘அய்யன்பேட்டையில் பொருள் வாங்குங்கள், ஆண்டார்பந்தியில் உணவு படையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

- Advertisement -

அதன்படி, அய்யன்பேட்டை சென்றபோது இறைவன் தராசோடும், இறைவி படியோடும் வாணிகம் செய்திருக்கிறார்கள்.  அங்கு பொருள் வாங்கி பக்கத்து ஊரான ஆண்டார்பந்தியில் உணவு படைத்திருக்கிறார்கள்.  எனவேதான் இங்கு செட்டியப்பர் என்கிற சுந்தரேஸ்வரர் சுவாமி, படியளந்த நாயகி என்கிற மீனாட்சி அம்பாள் வீற்றிருக்கிறார்கள்.

sivan

இது வியாபாரத் தலம் என்பதால் பெரும்பாலும் கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் வந்து வணங்குகிறார்கள்.

கோயிலிற்கு செல்லும் வழி: மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய ஊர்களிலிருந்து பூந்தோட்டம் வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்து மார்க்கத்தில் மருதுவாஞ்சேரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தெற்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

- Advertisement -