தடைகள் நீங்க, வியாபாரம் பெருக இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்ந்து உங்கள் வீட்டின் நிலை வாசலில் கட்டி வையுங்கள்

nelli
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் பலவித மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய விஷயங்களும், சங்கடம் கொடுக்கக்கூடிய விஷயங்களும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கும். ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் என்றால் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பர். அதுவே அந்த குடும்பத்தில் எவருக்காவது மற்றொருவருடன் சண்டை ஏற்பட்டு விட்டால் குடும்பம் அனைத்தும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் இருப்பார்கள். இதனால் வீட்டில் நடக்க கூடிய நல்ல காரியங்கள் அனைத்தும் தடைபட்டுக் கொண்டிருக்கும். அல்லது பணம் குறைபாட்டினால் செய்யவேண்டிய நல்ல நிகழ்வுகள் செய்ய முடியாமல் தடைபட்டுக் கொண்டிருக்கும். இவ்வாறான தடைகள் நீங்கவும், வியாபாரம் பெருகி, வருமானம் தடையின்றி வரவும் இந்த மூன்று பொருட்களை மூட்டையாகக் கட்டி நிலை வாசலில் மாட்டி வையுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் ஆச்சரியமிக்கதாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

family

இந்தப் பிரபஞ்சத்திற்கு மனிதனின் எண்ணங்களை உட்கிரகித்து அதற்கு ஏற்ற பலனை கொடுக்கின்ற சக்தி இருக்கிறது. நமது எண்ணங்கள் இந்த பிரபஞ்சத்தில் எந்த அளவிற்கு நிறைந்து இருக்கின்றனவோ அந்த அளவிற்கு நமக்கான பலன் விரைவில் கிடைக்கிறது. எனவே தான் நமக்கு எது நடக்க வேண்டுமோ அதனை ஒருமித்த மனதோடு நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனையே இறைவனிடமும் வேண்டிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த பிரபஞ்சம் நமக்கான தேவைகளை இனிதே நடத்திக் கொடுக்கிறது.

- Advertisement -

நமது எண்ணங்கள் நேர்மையானதாக இருந்தால் நமக்கு நடக்கக்கூடிய விஷயங்களும் நல்லதாகவே நடக்கும். நமது எண்ணங்கள் எதிர்மறையாக இருந்தால் நமக்கு உண்டாகும் பலன்களும் தீமையாக தான் இருக்கும். எனவே நேர்மறை எண்ணங்களை கொடுக்கும் இந்த நெல்லிகாய் வைத்துதான் இந்த பரிகாரத்தை செய்யப்போகின்றோம். இந்த நெல்லிகாய் காய் வகையையும் சேராது, கனி வகையையும் சேராது இதுவே இதன் சிறப்பாகும்.

nellikai1

அதற்கு முதலில் இந்த நெல்லிக்காயை இரண்டு எடுத்துக் கொண்டு, அதனை இரு கைகளிலும் வைத்து கண்டு காலை நாலரை மணி முதல் 5 மணிக்குள் பூஜை அறையின் முன் அமர்ந்து கொண்டு, ஒரு கையில் இருக்கும் நெல்லிக்காயை உச்சந்தலையின் மீது வைத்து கண்களை மூடி 5 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு கைகளையும் இறுக்கமாக மூடி தொடையின் மீது வைத்துக் கொண்டு கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அரை மணி நேரம் செய்வதன் மூலம் நமது உடலிலும், உள்ளத்திலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்து இருக்கும்.

- Advertisement -

பிறகு இந்த நெல்லிக்காய்களை நன்றாகக் கடித்து மென்று விழுங்க வேண்டும் அதன்பிறகு இந்த கொட்டைகளை சேமித்து வைக்க வேண்டும் பின்னர் இவ்வாறு சேமித்து வைத்த நெல்லிக்காய் கொட்டைகளை ஒரு சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் கல்லுப்பு நிறைத்துக் கொண்டு அதன் மீது இந்த நெல்லி கொட்டைகளை தூவி விட்டு அதனை வாசலில் வைத்து விட வேண்டும்.

salt1

அடுத்ததாக ஒரு நெல்லிக்காய், சிறிதளவு உப்பு, சிறிதளவு மஞ்சள்தூள் மூன்றையும் ஒரு மஞ்சள் நிற துணியில் மூட்டையாகக் கட்டிக்கொண்டு, நிலை வாசலில் மாட்டி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது இல்லத்தில் தீய சக்திகள் நுழையாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அழிந்து தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் இனிதே நடைபெறும். இவ்வாறு வியாபார ஸ்தலங்களில் செய்வதன் மூலம் வியாபாரம் பெருகி பணவரவு அதிகரிக்கும்.

- Advertisement -