தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் தடை இல்லாமல் நடக்க உங்கள் வீட்டில் விசேஷம் நடைபெற இந்த இருபத்தி ஒரு நாள் பரிகாரத்தை தடையில்லாமல் செய்திடுங்கள்

pillayar
- Advertisement -

ஒவ்வொருவரும் பல விதமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தான் இருக்கின்றனர். பலருக்கும் இருக்கின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று தான் புலம்பிக் கொண்டிருப்பது. இந்த புலம்பலுக்கு காரணமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கும். இதனை எண்ணி புலம்பும் பொழுது பலரது வாயிலிருந்து வருகின்ற ஒரே மாதிரியான வார்த்தைகள் தான் வருகின்றன. என்ன செய்தாலும் எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது, நான் நினைத்த எதுவும் சரியாக நடப்பதில்லை, எதை தொடங்கினாலும் அதில் நஷ்டம் மட்டும்தான் உண்டாகிறது. இதுபோன்ற புலம்பலுக்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்காது தான். இவ்வாறு ஒருவர் செய்கின்ற செயல்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்தால் அவர்களின் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். எனவே இதுபோன்ற தடங்கல்கள் வராமலிருக்க செய்கின்ற காரியங்களில் வெற்றி பெற இந்த பிள்ளையார் சுழி பரிகாரத்தை மட்டும் செய்து வாருங்கள். அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இதன் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வொரு செயலும் முதன்முதலில் துவங்குவது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். முதல் தொடக்கம் சரியாக இருந்தால் மட்டுமே முடிவும் சரியாக இருக்கும். இல்லாவிடில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று தொடங்கும் அனைத்தும் சரியில்லாமல் போய்விடும். இவ்வாறு பலரும் கூறியிருப்பதை நம் காதில் கேட்டிருப்போம்.

- Advertisement -

நமது சமூகத்தில் எந்த ஒரு செயலை துவங்குவதாக இருந்தாலும் அதில் விநாயகரை முதலில் வணங்கிய பின்னர் தான் அனைத்து கடவுளையும் வணங்கி, ஒரு செயலைத் துவங்குவோம். அவ்வாறு முதன்மைக் கடவுளான விநாயகரே ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னர் அவர் தன் தந்தை தாயை வணங்கும் வகையில் பிள்ளையார் சுழி வைத்து தான் துவங்குவார்.

எனவே தான் இந்த சுழிக்கு பிள்ளையார் சுழி என்று பெயர் வரப்பட்டது. அதுபோல ஒரு நோட்டு புத்தகத்தில் வரவு, செலவு கணக்கு எழுதினாலும், முக்கியமான குறிப்புகளை குறித்து வைத்தாலும் பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது பலரின் வழக்கமாகும். ஏனென்றால் பிள்ளையாரை நினைத்து செய்யும் எந்த ஒரு செயலும், காரியம் நிச்சயம் வெற்றியில் முடியும்.

- Advertisement -

எனவே தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்களுக்கும், புதிதாக துவங்கவிருக்கும் செயல்களில் வெற்றி கிடைப்பதற்கும் இந்த பிள்ளையார் சுழி பரிகாரத்தைச் செய்து வந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும். அதற்கு முதலில் ஒரு பூஜை மனை அல்லது மரப்பலகை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை சுத்தம் செய்து, அதன் மீது முழுவதும் மஞ்சள் பூசிக் கொள்ள வேண்டும்.

பிறகு அந்த மனையில் நான்கு மூலையிலும் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசி மாவு வைத்து அந்த மனையின் மீது இருபத்தி ஒரு பிள்ளையார் சுழி போட வேண்டும். பின்னர் இதனை பூஜை அறையின் முன் வைத்து, அதன் மீது சிறிது அளவு மலர்களை வைக்க வேண்டும். எழுதிய பிள்ளையார் சுழி ஒவ்வொன்றின் மீதும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கொஞ்சம் மலர்களை எடுத்துக் கொண்டு, கண்களை மூடி, முழு மனதுடன் நான் செய்யவிருக்கும் காரியங்கள் நன்மையாக நடக்கவேண்டும், தடைபட்டுக் கொண்டிருக்கும் இந்த விசேஷங்களுக்கான தடைகள் நீங்கி நன்மையாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, பிள்ளையாரை நினைத்து ஒவ்வொரு மலராக மனையின் மீது தூவ வேண்டும்.

- Advertisement -