தலையணைக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் தலைப்போகும் பிரச்சனையை கூட 3 நாட்களில் சரி செய்து விடலாம்.

amman
- Advertisement -

இந்த பிரச்சனையில் என் தலையே போய்விடும் போல இருக்கிறது. அப்படி என்ன தலை போகக் கூடிய பிரச்சனை என்று சில பிரச்சனைகளை நாம் சொல்லுவோம். அப்படி ஒரு சங்கடத்தை தரக்கூடிய பிரச்சனையை கூட, சுலபமாக சமாளிக்க ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு பெரிய அளவில் செலவு கிடையாது. பெரிய அளவில் பூஜை புனஸ்காரங்கள் கிடையாது. வெறும் ஒரே ஒரு எலுமிச்சை பழம் இருந்தால் போதும். இதை செய்து முடித்து விடலாம்.

பழுத்த மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு, சுத்தமாக துடைத்து விடுங்கள். அதை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சம் பழத்தை 3 நாட்கள் இரவு தலையணுக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். எப்படி தெரியுமா.

- Advertisement -

முதல் நாள் கையில் எலுமிச்சம் பழத்தை வைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய அந்த ஒரு பெரிய கஷ்டத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று குலதெய்வத்தையும் அம்மனையும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டு, இந்த எலுமிச்சம் பழத்தை தலையணை அடியில் வைக்க வேண்டும். தலையணை உரைக்கு உள்ளே வைத்துக் கூட தலைக்கு வைத்து தூங்கலாம். (எவ்வளவு பெரிய மன கஷ்டத்திற்கும், பணக்கஷ்டத்திற்கும் இந்த பரிகாரம் ஒரு நல்ல தீர்ப்பை கொடுக்கும். ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனை வைக்க வேண்டும்.)

மூன்று நாட்கள் இரவு இந்த எலுமிச்சம் பழம் உங்கள் தலையணைக்கு அடியிலேயே இருக்க வேண்டும். பகல் நேரத்தில் எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு அலமாரியில் யார் கைக்கும் படாமல் வைத்து விடுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை மற்றவர்கள் தொடக்கூடாது. மூன்று நாட்கள் இரவு தூங்கி முடித்து விட்டீர்கள். நான்காவது நாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு இந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் உங்கள் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய அம்மன் கோவில் சூளத்தில் குத்தி விட வேண்டும்.

- Advertisement -

அம்மன் கோவிலுக்கு சென்று மனதார உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்ற வேண்டுதலை அம்மன் பாதங்களில் வைத்து அம்மனுக்கு தேங்காய் உடைத்து, அர்ச்சனை செய்து, புஷ்பங்கள் வாங்கி கொடுத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முறையான வழிபாட்டோடு செய்து முடித்துவிட்டு இந்த எலுமிச்சம் பழத்தை அம்மன் வாசலில் இருக்கும் சூலத்தில் குத்தி விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விடுங்கள்.

உங்களுடைய கஷ்டங்கள் அதோடு தீர்ந்தது. எல்லா கஷ்டங்களையும் அந்த அம்பாள் பார்த்துக் கொள்வாள் உங்கள் உடம்பை பிடித்த பீடை எல்லாம் விலகும். எதிர்மறை ஆற்றல் எல்லாம் அந்த எலுமிச்சம் பழத்தோடு உங்களை விட்டு விலகி இருக்கும். உங்களுடைய குடும்பத்திற்கும் உங்களுக்கும் பிறகு நல்லது மட்டுமே நடக்க தொடங்கும். எளிமையான பரிகாரம்தான். ஆனால் கை மேல் பலன் தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம் இது. நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு உடனடியாக நல்ல பலனை அந்த அம்பாள் காட்டிக் கொடுப்பாள் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -