ஒரு குண்டுமணி தங்கத்தை இந்த இலையில் சுருட்டி வைத்தால், சீக்கிரமே பவுன் பவுனாக தங்கம் வாங்கக்கூடிய நேரம் தேடி வரும்.

gold
- Advertisement -

சில நேரங்களில் நாம் வாங்கக்கூடிய சின்ன தங்கம் மேலும் மேலும் நமக்கு தங்கத்தை சேர்க்கும். வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி தங்கம் என்றாலே நிச்சயமாக ஒரு ஆசை இருக்கும். எந்த பொருள் வாங்கினாலும் அதை தங்கத்தில் வாங்கலாமே. அப்படி தங்கத்தில் வாங்கினால் அந்த தங்கத்தில் போட்ட காசும் நமக்கு வீணாக போகாது. அதேசமயம் நம் வீட்டிற்கு ஐஸ்வர்யமும் கிடைக்கும். இந்த தங்கத்தை நிறைய சேர்க்க வேண்டும் என்பதற்கு எத்தனையோ பரிகாரங்கள் நமக்கு தாந்திரீக ரீதியாகவும், சாஸ்திர ரீதியாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலபமான சக்தி வாய்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

உங்க வீட்ல ஒரு சின்ன குண்டுமணி தங்கம் தான் இருக்கிறதா. சின்ன மூக்குத்தி இருந்தாலும் சரி, அந்த தங்கத்தை வைத்து நிறைய தங்கம் வாங்கக்கூடிய யோகத்தை நாம் பெறலாம். எப்படி தெரியுமா. ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் அந்த இலை எந்த இலை தெரியுமா.

- Advertisement -

அரச இலை. ‌எல்லா இடங்களிலும் பெரும்பாலும் இந்த அரச இலை கிடைக்கும். நிறைய நல்ல காரியங்களுக்கு இந்த அரச இலையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். காரணம் இல்லாமலேயே எல்லா நல்லதிற்கும் அரச இலை தேவை என்று சொன்னார்கள். அதற்கு இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலும் சக்தியும் அத்தனை அதிகம். காரணம் இல்லாமையா அரச மரத்தை சுற்றினால் நல்லது நடக்கும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். எல்லாத்திற்குள்ளும் நல்ல விஷயம் அடங்கியிருக்கிறது.

அரச மரத்தில் இருந்து ஒரு அரசு இலையைக் கொண்டு வந்து வீட்டில் வைத்து, லேசாக தண்ணீர் தெளித்து விடுங்கள். தண்ணீர் இல்லாமல் இலையை துடைத்து விட்டு, அந்த அரச இலையில் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தங்கம் சின்ன மூக்குத்தி அல்லது சின்ன கம்மல், சின்ன திருகாணி எது இருந்தாலும் அதில் வைத்து அதை அப்படியே சுருட்டி விடுங்கள். அல்லது மடித்தும் விடலாம். அது உங்களுடைய விருப்பம் தான். ஆக மொத்தத்தில் அந்த தங்கம் அந்த இலைக்குள் இருக்க வேண்டும். மேலே சிறிய நூல் போட்டு கட்டிக் கொண்டாலும் சரி, அல்லது வாழை நார் கிடைத்தால் அது போட்டு கட்டிக் கொண்டாலும் சரி, பூ கட்ட பயன்படுத்தும் வாழைநார்.

- Advertisement -

இதை அப்படியே உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்து பூஜை அறையில் நின்று குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய வீட்டில் தங்கம் மேலும் மேலும் சேர வேண்டும். புதுசாக தங்கம் வாங்கக்கூடிய யோகம் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நன்றாக பிரார்த்தனை செய்து இதை அப்படியே உங்கள் வீட்டு பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். ஒரு வாரம் அப்படியே இருக்கட்டும். அதற்குள் பழைய இலை காய்ந்து விடும் அல்லவா. அதை எடுத்து, பழைய இலையை தூர போட்டுவிட்டு புதிய இலையில் அந்த தங்கத்தை வைத்து மீண்டும் சுருட்டி கட்டி இதே போல வேண்டுதல் வைத்து பீரோவில் வைக்கலாம்.

தொடர்ந்து இந்த வேண்டுதலை வைக்க வைக்க உங்களுடைய வீட்டில் தங்கம் சேர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். உதாரணத்திற்கு உங்கள் பெண் பிள்ளைக்கு திருமணம் செய்ய வேண்டும். தங்கம் சேர்க்க வேண்டும் என்றால், இப்படி பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பெண் பிள்ளை சின்ன வயதில் தான் இருக்கிறாள். இப்போதுதான் பள்ளிக்கூடம் செல்கின்றாள் என்றால் இந்த பிரார்த்தனையை செய்யத் தொடங்கிய ஒரு சில வருடங்களில் உங்கள் பெண் பிள்ளைக்கு கொஞ்சம் கொஞ்சமாக எவ்வளவு தங்கம் சேருகிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். பரிகாரத்தை சோதனை செய்து பார்க்கக் கூடாது. நம்பிக்கையோடு பரிகாரம் செய்தால் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -