தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பூஜையைச் செய்து வர, அட்சய திருதியை அன்று நீங்கள் சிறிதளவாவது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது உறுதி

atchaya
- Advertisement -

இன்னும் சிறிது நாட்களில் அட்சயதிரிதியை வரவிருக்கிறது. எப்பொழுதும் இந்த தினத்திற்காக நிறைய மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் இந்த சுபதினத்தில் சிறிதளவாவது தங்கம் வாங்கினால் அவர்களிடம் மளமளவென தங்கநகை பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் எப்படியாவது சிறுக சிறுக பணத்தை சேமித்து இல்லாதவர்கள் கூட அன்றைய தினம் அரை கிராம் தங்கமாவது வாங்கி விடுவார்கள். ஆனால் இந்த சிறிய தொகையைக் கூட தங்களால் செலவு செய்ய முடியாதவர்கள், எப்பொழுதும் அட்சய திருதியை அன்று தங்கள் இயலாமையை எண்ணி மனக் கவலையுடன் தான் இருப்பார்கள். ஆனால் இந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் நிச்சயம் நீங்கள் சிறிதளவு தங்கம் அல்லது வெள்ளியை வாங்கக் கூடிய நிலைமை உங்களிடம் வந்து சேரும். வாருங்கள் இந்த சிறப்பு பூஜையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அட்சய திருதியை வருவதற்கு முன்னதாக ஏதாவது ஒரு மூன்று நாட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்றைய தினத்தில் பெண்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். அதேபோல் காலை அல்லது மாலை வேளை இவற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த தீபத்தை ஏற்றி வைக்கலாம். அதற்காக முதலில் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதனை சுத்தமாக நீரில் கழுவி, மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பின்னர் இந்த வெற்றிலையை ஒரு தாம்புல தட்டின் மீது வைத்து விட வேண்டும். பிறகு சிறிதளவு பச்சை அரிசியை மஞ்சளில் கலந்து அந்த அட்சதையை வெற்றிலையின் மீது பரவலாக வைக்க வேண்டும். பிறகு அதன் மீது ஒரு புதிய அகல்விளக்கை வைத்து, நெய் ஊற்றி திரி போட வேண்டும்.

பின்னர் இந்த விளக்கினுள் சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு ஏலக்காய், சிறிதளவு டைமண்ட் கற்கண்டு இவை மூன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிகப்பு நிற அல்லது மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் குங்குமம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் சிறிதளவு சோம்பு, ஒரு துண்டு பச்சை கற்பூரம், 3 ஏலக்காய், 3 கிராம்பு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இவற்றை வைத்து அதனை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையையும் விளக்கு வைத்துள்ள தாம்புல தட்டின் மீது வைத்து விட வேண்டும்.

பிறகு தீபத்தை ஏற்றி மகாலட்சுமி தேவியின் படத்திற்கு முன்பு வைத்துவிட வேண்டும். பிறகு ஒரு பிரியாணி இலையில், அட்சய திருதியை அன்று நான் சிறிதளவு தங்கமாவது வாங்க வேண்டும் என்று பேனாவால் எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு இந்த இலையை கையில் வைத்துக்கொண்டு கண்களை மூடி, மகாலட்சுமி தாயை வேண்டிக்கொண்டு பிரியாணி இலையை தீபச்சுடரில் காண்பித்து முழுவதுமாக எரித்துவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -