தயிர் ஒன்று மட்டும் வீட்டில் இருந்தால் போதும். முகம், தலைமுடி என இரண்டிற்கும் பயன்படுத்தி தலை முடியையும் அதிகரிக்கலாம், முக அழகையும் கூட்டலாம்.

thayir
- Advertisement -

இன்றைய காலக் கட்டத்தில் நம் முகத்தை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பது என்பது சவாலான செயல் தான். இன்று மாறி வரும் பருவநிலை, சுற்றுசூழல், உணவு பழக்கம் ஆகியவற்றால் நம் முகமானது பெருமளவில் பாதிக்க தான் செய்கிறது. இதனால் இன்று பெரும்பாலான பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அழகு நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர். பணம் இருப்பவர்கள் இதை செய்துக்கொள்வார்கள் ஆனால் இயலாதவர்கள் என்ன செய்யவார்கள். இனி இதுப்பற்றி கவலைப்பட தேவையில்லை. நம் எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்கும் ஒரு பொருளை கொண்டே நம் முகத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். அது வேறு ஒன்றும் இல்லை நாம் உணவில் அன்றாடம் சேர்த்துக் கொள்ளக் கூடிய தயிர் தான்.

இதற்கு நன்றாகப் புளித்த தயிரை தான் சரியாக இருக்கும். பெரும்பாலும் நாம் வெளியே எங்கு சென்று வந்ததும் முகம் முழுவதும் தூசி படர்ந்து கருமையடைந்து பார்க்கவே பொலிவிழந்து தோன்றும். அப்போது பெரிதாக வேறெதுவும் செய்ய தேவை இல்லை. நன்றாக புளித்த தயிரை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். தயிர் நன்றாக காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரால் நன்றாக கழுவி விடுங்கள் அவ்வளவு தான் முகம் புது பொலிவுடன் இருக்கும்.

- Advertisement -

அது மட்டுமல்ல தயார் நம் தலை முடி நல்ல படியாக வளரவும் உதவி செய்யும். பெரும்பாலும் நம் முடி உதிர்வுக்கு காரணம் முடியில் தோன்றும் வறட்சி தான். ஆனால் தயிர் நம் தலை முடியில் உள்ள வறட்சியை நீக்கி எப்போதும் நல்ல போஷாக்குடன் முடியை நன்றாக வளரவும் செய்யும்.

தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு தயிர் தேய்த்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும் இதில் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். பின்பு எப்போதும் போல நீங்கள் உபயோகிக்கும் எந்ந ஷாம்பு, சீயக்காய் கொண்டும் முடியை அலசி விடுங்கள். தலையில் பொடுகு இருந்தால் அதுவும் கூட இந்த முறையில் சரியாகும். இந்த முறையை ஆண்களும் பின்பற்றலாம்.

அடுத்து முகத்தில் இருக்கும் முகப்பரு. இன்றைய இளைய தலைமுறையினர் இதனால் பெரிய மனவுளைச்சலுக்கே ஆளாகின்றனர். இதற்கும் இந்த தயிர் ஒரு சிறந்த மருந்து தான். ஒரு சிறிய கிண்ணத்தில் தயிர், கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவில் எடுத்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போல போட வேண்டும். பத்து நிமிடம் கழித்து முகம் அலம்பி விட வேண்டும். அவ்வளவு தான் முகப்பரு இருந்த இடத்தில் உள்ள கரும்புள்ளி கூட நாளடைவில் மறைய தொடங்கி விடும் அதிசயத்தை நீங்கள் காண்பீர்கள்.

- Advertisement -