துளசி செடி உங்கள் வீட்டில் இருக்கிறதா? தவறியும் இதனை மட்டும் செய்து விடாதீர்கள். தீராத துன்பத்திற்கு ஆளாகி விடுவீர்கள்

thulasi
- Advertisement -

இன்று வரையிலும் நமது தமிழர் பண்பாட்டின் படி வீட்டில் எந்த ஒரு சுப காரியங்கள் செய்வதாக இருந்தால் நல்ல நேரம் பார்ப்பதும், சாத்திரங்களின் படி கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதும் தொடர்ந்து வழக்கத்தில் உள்ளது. அதுபோல அபசகுணம் பார்ப்பது என்பதும் அனைவர் மத்தியிலும் இன்றுவரை இருக்கின்ற செயலாகும். அவ்வாறு வெளியில் செல்லும்போது பூனை குறுக்கே செல்வது, வீட்டிலுள்ள சுவாமி படங்கள் திடீரென உடைவது அல்லது வெள்ளிக்கிழமை அன்று கண்ணாடி உடைவது இது போன்ற விஷயங்களை நாம் அபசகுனமாக தான் பார்க்கின்றோம். அதுபோல ஒவ்வொரு வீட்டிலும் வீட்டின் நன்மைக்காக சில செடிகளை வளர்த்து வருவதையும் பழக்கமாக வைத்திருக்கிறோம். அவ்வாறு நாம் வளர்த்துவரும் துளசி செடியினை எவ்வாறு முறையாக பராமரித்து நமக்கான வரங்களை பெற வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Hindu Marriage

செடிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் தவறாமல் இந்த துளசிச் செடியும் நிச்சயம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு செடிகள் எதுவுமே வளர்க்காமல் இருந்தாலும் கூட இந்த துளசி செடியை மட்டுமாவது வீட்டில் வைத்து பலரும் பூஜித்து வருகின்றனர். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவின் அம்சமான இந்த துளசியைப் பூஜித்து வருவதன் மூலம் விஷ்ணு பகவானின் ஆசி முழுவதுமாக நமக்கு கிடைத்துவிடுமென்பது அனைவரின் பரிபூரண நம்பிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

இவ்வாறு மகாவிஷ்ணுவிற்கு விருப்பமான இந்த துளசிச் செடிகயை நாம் வீட்டில் வைத்து வணங்குவதன் மூலம் மகாலட்சுமி தேவியும் தானாகவே நமது வீடு தேடி வருகிறார். எந்த வீட்டில் மகாலட்சுமி குடி கொண்டிருக்கிராறோ அங்கு எப்பொழுதும் துன்பத்திற்கு இடம் இருக்காது. எல்லாவகையான செல்வச்செழிப்புகளும் நிறைந்து காணப்படும். கடன் சுமை இருக்காது. சொத்துக்கள் வாங்கும் வரம் கிடைக்கும்.

vishnu

இவ்வாரான வரங்களை அள்ளித் தரும் துளசி செடிகளை வீட்டில் முறையாக வைத்து வளர்த்திட வேண்டும். அதனை துளசி மாடத்தில் வைத்தோ அல்லது மண் தொட்டியில் வைத்தோ வளர்த்து வரலாம். துளசியில் பலவகைகள் இருக்கின்றன. கருந்துளசி இது காட்டுப்பகுதிகளில் தானாகவே வளர்ந்து வரும் செடியாகும். மற்றொன்று சற்று வெளிர் நிறத்தில் இருக்கும் சாதாரண துளசியாகும். இதனை தான் நாம் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.

- Advertisement -

இந்தத் துளசிக்கு காலை சூரிய உதயத்திற்கு முன்னர் சுத்தமான நீரை ஊற்ற வேண்டும் வெள்ளிக்கிழமை தோறும் பால் அபிஷேகம் செய்து நெய் தீபம் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றி துளசிச் செடியை மூன்று முறை பிரதட்சணம் செய்து வணங்கிட வேண்டும்.

thulasi chedi

இவ்வாறு நாம் பூஜிக்கும் துளசி இலைகளை எந்தவித காரணத்திற்காகவும் பறித்து விடக்கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பெரும் துன்பம் தான் ஏற்படும். இதனை பறித்து தான் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது. துளசியை இருக்கும் இடத்தில் வைத்தே பூஜித்தால் மட்டும் போதுமானதாகும். இதுவே நமக்கான பலன்கள் அனைத்தையும் சிறப்பாக கொடுத்திடும். அதுபோல் வீட்டிற்கு வரும் வெளியாட்கள் எவரும் துளசிச்செடியை தொட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மற்றவர்கள் துளசிச் செடியை தொடும் பொழுது அவர்களிடம் இருந்து வரும் எதிர்மறை சக்திகளினால் நமக்கு தீராத துன்பங்கள் சேர்ந்து விடும்.

- Advertisement -