வீட்டில் இருப்பவர்கள் எப்போதுமே மந்தமாக சோர்வோடு நோய்நொடியோடு இருக்கிறார்களா? வீட்டை பிடித்த இருள் அகல இந்த தீபம் ஏற்றினால் போதும்.

home-deepam
- Advertisement -

உங்களுடைய கணவர் ஆக இருக்கட்டும் அல்லது உங்களுடைய பிள்ளைகள் ஆக இருக்கட்டும், சுறுசுறுப்பாக வெளியே செல்ல வேண்டும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை வைத்து செய்யப்படாமல் அப்படியே சுருண்டு போய் வீட்டிலேயே படுத்துக் கிடப்பார்களா. வீட்டில் எப்போதுமே நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கிறதா. வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழ்நிலை ஏற்படுகிறதா. மன அழுத்தம் காரணமாக வீட்டில் இருப்பவர்கள் எதை சொன்னாலும் அடிக்கடி முன் கோவப்படுகிறார்களா. வீட்டில் இருக்கக் கூடிய இப்படிப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தர ஒரு சுலபமான பரிகாரம் உங்களுக்காக.

இந்த பரிகாரத்தை நாள் கிழமை எல்லாம் பார்க்க வேண்டாம். உங்களுடைய வீடு திடீரென்று இருள் சூழ்ந்து, சூனியம் பிடித்த வீடு மாதிரி தோற்றம் அளிப்பதாக இருந்தால் உடனடியாக கண்ணை மூடிக்கொண்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். 7 நாட்களில் வீட்டில் நல்ல மாற்றம் தெரியும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக உங்களுடைய வீட்டை கல் உப்பு கலந்த தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். மதிய நேரம் உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து, மாலை 6.30 மணிக்கு மேலாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டில் இருக்கும் மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விடுங்கள். கதவு ஜன்னல்களை சாத்தி விட வேண்டும்.

அதன்பின்பு ஒவ்வொரு அறையின் நான்கு மூலையிலும் ஒவ்வொரு மெழுகுவர்த்தியை வைக்கவேண்டும். உதாரணத்திற்கு படுக்கையறை என்றால், படுக்கை அறையின் 4 மூலையில் நான்கு மெழுகுவர்த்திகளை நிற்க வைத்துவிட்டு அதை ஏற்றி விடுங்கள்.

- Advertisement -

இதேபோல சமையல் அறை, வரவேற்பறை உங்களுடைய வீட்டில் மற்ற எந்தெந்த அறைகள் இருக்கிறதோ எல்லா அறைகளிலும் நான்கு மூலைகளிலும், நான்கு மெழுகுவர்த்திகளை ஜாக்கிரதையாக ஏற்றி வைத்துவிட்டு கதவை சாத்திக்கொண்டு நீங்கள் வீட்டின் வெளியே சென்று விடுங்கள். ஒரு மணிநேரம் வீட்டில் யாரும் வீட்டிற்குள் இருக்க வேண்டாம். இந்த மெழுகுவர்த்தி எரிந்து அணையட்டும். 1 மணி நேரம் கழித்து வந்து கதவு ஜன்னல்களை எல்லாம் திறந்து விட்டு எப்போதும் போல உங்களுடைய தினசரி வேலையைத் தொடங்குங்கள்.

7 நாட்கள் தொடர்ந்து இவ்வாறு உங்களுடைய வீட்டில் இந்த மெழுகுவர்த்தி சுடரை ஏற்றி வைக்கும் பட்சத்தில், வீட்டில் இருக்கும் தீய சக்திகள் எல்லாம் இந்த ஒளியில் பொசுங்கிப் போகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை கட்டாயமாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு தான் ஏற்ற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது தவிர உங்களால் முடிந்தால் செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க ரங்க நாதரை தரிசனம் செய்துவிட்டு வருவது மிகவும் நல்லது. மேல் சொன்ன பரிகாரங்களை செய்தாலே போதும். வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலைகளை கவனித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறியோடு செயல்படுவார்கள்.

இதேபோல எப்போதுமே நம்முடைய வீட்டை இருள் சூழ்ந்த வீடாக வைத்திருக்கக்கூடாது. சூரிய வெளிச்சம் உள்ளே வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்கிரீனை மூடி மூடி வெளிச்சத்தை உள்ளே வராமல் தடுத்து நிறுத்தாதீர்கள். இருள் சூழ்ந்த வீட்டில் நாம் வசிக்கும் போது நம்முடைய வாழ்க்கையும் இருட்டாகத்தான் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -